அன்பான மனைவியின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த கொடூர கணவன்.! நல்லவனாக காண்பிக்க அரங்கேற்றிய கொடூர நாடகம்.!!
in pollachi husband killed her wife due to doubt
கோயம்புத்தூர் மாவட்டத்தில், பொள்ளாச்சி அருகேயுள்ள ஆர்.பொன்னாபுரம் பகுதியை சார்ந்தவர் சக்திவேல். இவர் விவசாய நிலங்கள் மற்றும் தோட்டங்களுக்கு மருந்து அடிக்கும் தொழிலை செய்து வருகிறார். இவரது மனைவியின் பெயர் கெளசல்யா. இவர்கள் இருவருக்கும் திருமணம் முடிந்து சுமார் எட்டு வருடங்கள் ஆகும் நிலையில்., 7 வயதுடைய பெண் குழந்தையொன்று இவர்களுக்கு உள்ளது.
இவர்கள் இருவரும் குழந்தையுடன் வசித்து வந்த நிலையில்., கெளசல்யாவை காணவில்லை என்று கூறி., கடந்த சில நாட்களுக்கு முன்னர் சக்திவேல் புகார் அளித்திருந்தார். அந்த புகாரில்., தனது மனைவிக்கும் - மற்றொரு வாலிபருக்கு இடையே கள்ளத்தொடர்பு இருப்பதாகவும்., இதனடிப்படையில் அவர் கள்ளக்காதலனுடன் மாயமாகியிருக்கலாம் என்று குறிப்பிட்டு இருந்தார்.
இவரின் புகாரை ஏற்ற காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில்., கெளசல்யாவிற்கு கள்ளக்காதல் தொடர்பு இல்லை என்ற தகவல் மட்டும் உறுதியாக தெரிந்துள்ளது. மேலும்., கணவன் - மனைவிடையே அடிக்கடி குடும்ப தகராறு அதிகளவில் ஏற்பட்டு வந்துள்ளது தெரியவந்துள்ளது. இதனை அறிந்த காவல் துறையினர் சக்திவேலிடம் மேற்கொண்ட தீவிர விசாரணையில் பல உண்மைகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காவல் துறையினர் மேற்கொண்ட தீவிர விசாரணையில் சக்திவேல் தெரிவித்ததாவது., எனது கிராம சுற்றுப்புற பகுதியில் இருக்கும் தோட்டத்தில் மருந்து அடிக்கும் பணி செய்து வருகிறேன். நான் பணியாற்றிய இடத்தில் தான் கெளசல்யாவை சந்தித்தேன். நாங்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். எங்களின் வாழ்க்கை சிறப்பாக சென்று கொண்டு இருந்தது.
இந்த நேரத்தில்., கெளசல்யாவின் நடத்தையில் எனக்கு ஏற்பட்ட சந்தேகத்தால்., அவரை தொடர்ந்து சந்தேகித்து கொண்டு வந்தேன். இதனால் எங்கள் இருவருக்கும் இடையே தினமும் சண்டை நடைபெறும். இவ்வாறாக நடைபெற்ற சண்டையில் கடந்த 26 ஆம் தேதி கெளசல்யாவை நான் அடித்த போது., எனது பிடியில் இருந்து தப்பி செல்ல முயன்றார். இதனையடுத்து அவரை நான் கொலை செய்தேன்.
கெளசல்யாவை கொலை செய்த பின்னர் அவளின் உடலை சாக்கு மூட்டையில் கட்டி கிணற்றில் வீசினேன். எனது மீது சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக., மாமியாரின் இல்லத்திற்கு சென்று., மனைவியின் நடத்தை சரியில்லை என்று கூறி அழுதேன். இதனை அனைவரும் நம்பியதால்., காவல் நிலையத்திலும் அவ்வாறே புகார் அளித்தேன் என்று கூறியுள்ளான்.
இதனையடுத்து கெளசல்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி மருத்துவமனைக்கு காவல் துறையினர் அனுப்பி வைத்தனர். மேலும்., மனைவியின் நடத்தையில் சந்தேகித்து கொலை செய்து காவல் துறையினர் மற்றும் உறவினர்களிடம் ஆடிய நாடகம் அப்பட்டமானதால் செய்தவறியாது சக்திவேல் திகைத்தான். இந்த சம்பவம் அங்குள்ள பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
in pollachi husband killed her wife due to doubt