இளம்பெண்ணை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டி ரூ.56 இலட்சம் பறித்த காம கொடூரன்.! பொள்ளாச்சியில் மீண்டும் பரபரப்பு.!!
in pollachi girl rapped by culprit and tortured capturing video police investigation going on
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சியை அடுத்துள்ள மகாலிங்கபுரம் காலனி பகுதியை சார்ந்த 37 வயதுடைய பெண்ணொருவர்., திருமணம் முடிந்து தனது கணவரை பிரிந்து சென்னையில் பணியாற்றி வருகிறார். இவர் இணையத்தின் மூலமாக பொள்ளாச்சி மகளீர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில்.,
எனக்கு கடந்த 9 வருடங்களுக்கு முன்னதாக திருமணம் நடைபெற்று முடிந்தது. எனக்கும் - எனது கணவருக்கும் இடையே இருந்த கருத்து வேறுபாட்டின் காரணமாக., கடந்த 4 வருடங்களுக்கு முன்னதாக கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்தேன். இதற்கு பின் எனது வாழ்க்கைக்காக சென்னையில் இருக்கும் கிண்டி தகவல் தொழில்நுட்ப மையத்தில் பணியாற்றி வந்தேன்.
இந்த சமயத்தில்., எனது நிறுவனத்தில் பணியாற்றிய கோயம்புத்தூர் ஜி.டி.நாயுடு பகுதியை சார்ந்த ஜனார்த்தனன் என்பவரின் மகன் கிஷோர் (வயது 35) என்பவனுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கமானது எங்களுக்குள் நட்பு ரீதியாக தொடர்ந்த நிலையில்., எங்களுக்குள் காதல் மலர்ந்தது. இதற்கு பின் நாங்கள் இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்தோம்.
Tamil online news Today News in Tamil
பின்னர் திருமணம் செய்வதாக என்னிடம் கூறியதை அடுத்து., அவனுடன் கிண்டியில் இருக்கும் நட்சத்திர விடுதிக்கு சென்று உல்லாசமாக இருந்தோம். பின்னர் இந்த காட்சிகளை எனக்கே தெரியாமல் வீடியோவாகவும் எடுத்து வைத்துள்ளான். இதனையடுத்து நான் திருமணம் செய்ய சொல்லி பல முறை வற்புத்தியும் அதனை ஏற்க மறுத்தான்.
இந்த நிலையில்., என்னை தொடர்ந்து வற்புறுத்தி எனது ஆபாச படங்களை இணையத்தில் வெளியிட்டுவிடுவேன் என்று கூறி ரூ.56 இலட்சத்தை பறித்துவிட்டான். இது குறித்து வெளியே கூறினால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டினான். இவன் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார். இதனை ஏற்ற காவல் துறையினர் காம் கொடூரன் கிஷோரின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
in pollachi girl rapped by culprit and tortured capturing video police investigation going on