பொள்ளாச்சியில் 16 வயது சிறுமியிடம் அத்துமீறிய நாடக காதல் காம கொடூரன்களின் மீது அதிரடியாக பாயும் வழக்கு.!! காவல்துறையினர் அதிரடி.!!
in pollachi 16 year girl rapped by gang police filed case gundas
இந்த உலகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான அநீதிகள் நடைபெற்று வருகிறது. அவ்வாறு நடைபெறும் அநீதிகள் அவர்களுக்கு தெரிந்த மற்றும் பழகிய நபர்களாலேயே நடைபெற்று வருகிறது என்பதுதான் பெரும் அதிர்வலையை பதிவு செய்கிறது. கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களுக்கு எதிராக நடைபெற்ற அநீதிகளானது மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில்., இதனைப்போன்ற மற்றொரு சம்பவம் அரங்கேறியது.
பொள்ளாச்சியில் உள்ள செரீப் காலனி பகுதியை சார்ந்தவன் நாடகக்காதல் காம கொடூரன் அமானுல்லா (வயது 25). இவன் அங்குள்ள கிணத்துக்கடவு காய்கறி சந்தையில் கூலித் தொழிலாளியாக பணியாற்றி வருகிறான். இவனுக்கும் பொள்ளாச்சியில் உள்ள பகுதியை சார்ந்த சிறுமிக்கும் இடையே நட்பு ரீதியிலான பழக்கம் ஏற்பட்டது.
இந்த பழக்கமானது இவர்களுக்குள் காதலாக மாறும் அளவிற்கு ஆசை வார்த்தைகளையும்., நாடக காதல் லீலைகளையும் அரங்கேற்றி சிறுமியை தனது காதல் வலையில் காம கொடூரன் விழவைத்துள்ளான். பின்னர் சிறுமிக்கு திருமண ஆசையை காட்டி பலாத்காரம் செய்துள்ளான். இதற்கு பின்னர் சிறுமியை தனது 10 நண்பர்களுக்கும் விருந்தளித்து மகிழ்ந்துள்ளான்.
Tamil online news Today News in Tamil
இதுமட்டுமல்லாது இது குறித்து யாரிடமும் கூறினால் குடும்பத்துடன் கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டிய காம கொடூரனின் மிரட்டலுக்கு பயந்து சிறுமி இது குறித்து யாரிடமும் கூறாமல் இருந்து வந்த நிலையில்., இதனை உபயோகம் செய்து மீண்டும் சிறுமியை கூட்டாக சேர்த்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். இதனால் கடும் மனஉளைச்சலுக்கு உள்ளான சிறுமி தந்தையிடம் விஷயத்தை கூறி கதறியழவே., இதனை கேட்ட தந்தை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளார்.
இதனையடுத்து இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் காவல் துறையினர் அதிரடியான விசாரணையை மேற்கொண்ட சூழலில்., சிறுமியை பலாத்காரம் செய்த காம கொடூரன்களான அமானுல்லா., சி.டி.சி. காலனியை சார்ந்த இர்ஷத் முகமது (வயது 28)., ஆண்டாள் அபிராமி நகரை சார்ந்த பகவதி (வயது 26)., குமரன் நகரை சார்ந்த சையது முகமது (வயது 25)., செரீப் காலனியை சார்ந்த முகமது ரபீக் (வயது 28)., ஊத்துக்குழியை சார்ந்த முகமது அலி (வயது 28)., அழகாபுரியை சார்ந்த டேவிட் செந்தில் (வயது 30)., மடத்துகுளத்தை சார்ந்த அருண் நேரு (வயது 28)., இர்ஷத் பாஷா (வயது 28) ஆகிய 9 பேரை அதிரடியாக கைது செய்து., போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த கொடூர விஷயத்தில் ஈடுபட்ட காம கொடூரன் பொள்ளாச்சி தெப்பக்குளம் பகுதியை சார்ந்த பெயிண்டர் பிரபு என்ற மணிகண்டன் (வயது 22) என்பவன் தலைமறைவாகவே இவனை தனிப்படை அமைத்து காவல் துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட நிலையில்., அங்குள்ள தெப்பக்குளம் ஆட்டோ நிறுத்தம் அருகேயிருந்த காம கொடூரனை கைது செய்தனர். இதனையடுத்து காம கொடூரன்கள் மீது வழக்குப்பதிவு செய்த நிலையில்., குண்டர் தடுப்பு பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்ய காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
in pollachi 16 year girl rapped by gang police filed case gundas