வழக்கறிஞர் என்ற போர்வையில் அடாவடி செய்து அராஜகம்... பரபரப்பு வாங்குவாத வீடியோ காட்சிகள்.!! - Seithipunal
Seithipunal


காவல் துறை அதிகாரிகள் தங்களின் கடமையை இரவுபகல் பாராது தொடர்ந்து மக்களுக்காக செய்து வருகின்றனர். சில இடங்களில் காவல் துறையினரிடம் பொதுஜனம் என்று கூறிக்கொண்டு, அத்துமீறும் செயலும் அரங்கேறி வருகிறது. காவல் அதிகாரி கண்காணிப்பு பணிக்கு செல்கையியல் வழக்கறிஞர் என்ற போர்வையில் மது போதை ஆசாமி அவதூறாக பேசுவது தொடர்பான வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.

தமிழகத்தின் பெரம்பலூர் நகரின் காவல் நிலையாக சரகத்திற்கு உட்பட்ட பகுதியில், தலைமை காவல் அதிகாரியான முத்துக்குமார் கடந்த 8 ஆம் தேதியன்று இரவு நேரத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்துள்ளார். 

இந்த நேரத்தில், வாலிபர் ஒருவர் சிறுமியுடன் தனியாக பேசிக்கொண்டு இருப்பதை கண்டு விசாரித்துள்ளார். இதனையடுத்து வாலிபர் மது போதையில் இருந்த மூன்று பேரை அழைத்து வந்து தகாத வார்த்தையால் திட்டியுள்ளார். 

மேலும், இவர்கள் தன்னை வழக்கறிஞர் என்று கூறி காவல் அதிகாரியை ஒருமையால் விமர்சித்துள்ளனர். வழக்கறிஞர் என்று கூறிய நபர் மது போதையில் காவல் அதிகாரியை அடிக்க பாய்வதும், மது போதை ஆசாமியுடன் இருந்த நபரை பிறர் பிடிக்க செல்வது தொடர்பான காட்சிகள் வைரலானது. இது தொடர்பாக காவல் துறையினர் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in perampalur police disturbed duty gang video


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?




Seithipunal
--> -->