பொள்ளாச்சியை போன்று பெரம்பலூரில் அரங்கேறிய துயரம்.!! கல்லூரி மாணவிகளை மயக்கி வாழ்க்கையை சீரழித்து துடிக்க வைத்த கொடூரம்.!!
in perampalur girl sexual harassment like a pollachi issue police investigation going on
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சியை சார்ந்த இளம் பெண்களை முகநூலின் மூலமாக பழகி., அவர்களை அழைத்து சென்று கூட்டுப்பலியால் வன்கொடுமைக்கு உட்படுத்திய., விடியோவாக பதிவு செய்து மிரட்டிய திருநாவுக்கரசு மற்றும் அவனது நண்பர்கள் குறித்த தக்வலானது வெளியாகி., தமிழகம் முழுவதும் பெரும் பிரளயத்தை ஏற்படுத்தி., மக்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.
இதுகுறித்த புகார் பெரம்பலூர் மாவட்ட தலைமை காவல் அலுவலகத்தில் உள்ள மாவட்ட கண்காணிப்பாளருக்கு புகார் ஒன்று வந்துள்ளது. அந்த புகாரில் மனுதாரர் குறிப்பிட்டுள்ளதாவது., இணைய சமூக வலைத்தளத்தில் பெண்களிடம் நண்பர்கள் போல பழகி பாலியல் தொல்லைக்கு பொள்ளாச்சியில் ஆளாக்கிய சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
அதனைப்போன்று பெரம்பலூரில் பெண்கள் தற்போது பாதிக்கப்பட்டுள்ளனர். பெரம்பலூரில் இருக்கும் குறித்த நபர்., பல குடும்ப பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகளின் வாழ்க்கையை சீரழித்ததாகவும்., இதனால் பல பெண்கள் பல கொடுமைகளுக்கும் உள்ளாகியுள்ளனர். சம்பந்தப்பட்ட பெண்களிடம் ஆசை வார்த்தையை கூறி., அவர்களை அழைத்து சென்று கூட்டு பாலியல் வன்கொடுகைக்கு உட்படுத்தியுள்ளனர்.
இவர்களின் வலையில் விழும் பெண்களை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு., காட்சிகளாக பதிவு செய்து கொண்டுள்ளனர். இந்த காட்சிகளை பாதிக்கப்பட்ட பெண்களிடம் காண்பித்து பணம் மற்றும் நகைகளை பறித்தும்., நகை மற்றும் பணம் வழங்க மறுத்த பெண்களிடம் ஆபாச காட்சிகளை இணையத்தில் பரப்பிவிடுவதாக தெரிவித்துள்ளனர்.
இதுமட்டுமல்லாது பணம் இல்லாத பெண்களை தொடர்ந்து ஆபாச காட்சிகளை வெளியிடுவதாக மிரட்டி மீண்டும் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியும்., மிரட்டும் பெண்கள் அடிபணிய மறுக்கும் பட்சத்தில்., ஆபாச காட்சிகளை வெளியிடுவதாகவும்., இதனை கண்ட குடும்பத்தினர் தூக்கில் தொங்கி விடுவார்கள் என்றும் மிரட்டியுள்ளனர்.
இந்த கொடுமைக்கு தற்போது வரை சுமார் 20 க்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்., இந்த கும்பலில் சிக்கிய பெண்கள் இது குறித்து வெளியே சொல்ல முடியாமல் தவித்து வரும் நிலையில்., இந்த கொடூரங்கள் அனைத்தும் அங்குள்ள நட்சத்திர விடுதியில் நடைபெறுவதாகவும் தகவல் கிடைத்துள்ளது. இந்த பிரச்சனை குறித்து காவல் துறை அதிகாரிகள் தகுந்த நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த தகவல் கிடைத்ததும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உடனடியாக விசாரணையை மேற்கொள்ள துவங்கினார். இந்த சம்பவமானது பெரும் தற்போது மீண்டும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில்., இது குறித்த விசாரணையில் தனிப்படை காவல் துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவமானது பெரும் அதிர்வலையை மீண்டும் ஏற்படுத்தியுள்ளது.
English Summary
in perampalur girl sexual harassment like a pollachi issue police investigation going on