சிறுமியை திருமண ஆசை காட்டி ஏமாற்றிய நாடக காதலன்.! 7 மாத கர்ப்பிணியாக தவிக்கும் சோகம்.!!
in perampalur girl sexual harassment by drama lover
இந்த உலகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தினமும் பெண்கள் பாலியல் தொல்லைகளுக்கு உள்ளாகும் சோகம் அரங்கேறி வருகிறது.
மேலும்., பெண்களை ஏமாற்றி பாலியல் இச்சையை தீர்த்துக்கொள்ளும் கொடூரமும் நாடகக்காதல் மற்றும் நம்பிக்கை காதல் என்ற பெயரில் பெரும் நாடகம் ஒன்றும் அரங்கேறிக்கொண்டு வருகிறது.
தமிழகத்தின் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அய்யலூர் பகுதியை சார்ந்தவர் முருகேசன். இவரது மகனின் பெயர் சுரேஷ் (வயது 19). இவன் நெல் அறுவடை இயந்திர வாகன ஓட்டுநராக பணியாற்றி வருகிறார்.
இவர் இதே பகுதியை சார்ந்த 19 வயதாகும் பெண்ணை காதலித்து வந்த நிலையில்., திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் வன்கொடுமைக்கு அவ்வப்போது உள்ளாக்கியுள்ளான்.
தற்போது கொடூரன் திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்து வரும் நிலையில்., இதனால் பாதிக்கப்பட்ட பெண்மணி தற்போது 7 மாத கர்ப்பிணியாக இருக்கும் நிலையில்., பெண்ணின் தாயார் இது தொடர்பாக அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர்., சுரேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
in perampalur girl sexual harassment by drama lover