தவறான ஊசியால் குழந்தையை பரிதவிக்கவிட்டு உயிரிழந்த தாய்..! பெரம்பலூரில் பெரும் சோகம்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குன்னம் சிறுகுடல் கிராமத்தை சார்ந்தவர் தமிழ்செல்வி. இவர் கணவரை இழந்து தனது குழந்தையுடன் வசித்து வருகிறார். இந்நிலையில்., கடந்த சில நாட்களுக்கு முன்னதாக சளி மற்றும் இருமலின் காரணமாக அவதியுற்று வந்துள்ளார்.

இதற்க்காக அங்குள்ள கீழ்ப்புலியூர் கிராமத்தில் இருக்கும் கண்ணன் என்பவரின் மருந்து கடைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து அங்கிருந்த மருந்தகத்தின் உரிமையாளர் கதிரவன் தமிழ்செல்வியிடம் சில மருந்துகளை கொடுத்துள்ளார். 

மேலும்., தமிழ்செல்விக்கு ஊசி போட்ட நிலையில்., ஊசி போட்ட சில நிமிடத்திலேயே கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளார். பின்னர் அவரை சோதித்த சமயத்தில் அவர் உயிரிழந்தது தெரியவந்தது. 

medical, medical pharmacy, மருந்துக்கடை,

இதனையடுத்து இத்தகவலை அறிந்து தமிழ்செல்வியுடைய உறவினர்கள் மருந்தகத்திற்கு சென்று முற்றுகையிட்ட நிலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் இது தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரியவந்துள்ளது. 

தகவலை அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சமாதான பேச்சு வார்த்தை நடத்திய நிலையில்., தமிழ்செல்விக்கு ஊசி போட்ட மருந்தக உரிமையாளர் கதிரவனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in perambalur woman died injection by medical pharmacy owner


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->