கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மனைவி மற்றும் குழந்தையை கொலை செய்ய திட்டம்..! பெரம்பலூரில் பயங்கரம்.!!  - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வடக்கு மாதவி எம்.ஆர்.சி பகுதியை சார்ந்தவர் சரவணன். இவரது மனைவியின் பெயர் அன்பரசி. இவர்கள் இருவருக்கும் கடந்த 2014 ஆம் வருடத்தின் போது திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. 

தற்போது இவர்களுக்கு தனுஷ் காணு என்ற 5 வயதுடைய பெண் குழந்தையும்., மோகனா ஸ்ரீ என்ற 2 வயதுடைய பெண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில்., கணவன் - மனைவி இருவருமே அங்குள்ள தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகின்றனர். 

நேற்று இரவு நேரத்தில் வீட்டின் பின்புற பகுதியில் அன்பரசி அலறல் சத்தம் கேட்கவே., இதனால் பதறிப்போன அக்கம் பக்கத்தினர் வீட்டிற்குள் விரைந்த சமயத்தில் அன்பரசி கிணற்றுக்குள் இருந்துள்ளார். 

died, murder, suicide attempt,

இதனை கண்டு பதறிப்போன அக்கம் பக்கத்தினர் கிணற்றுக்குள் குதித்து அன்பரசியை மீட்ட நிலையில்., இது தொடர்பாக தீயணைப்பு படையினருக்கும் தகவல் தெரிவித்தனர். தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரிந்த மீட்பு படையினர் மீட்பு பணியை மேற்கொண்டனர். 

மேலும்., நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் மோகனஸ்ரீயை உயிரிழந்த நிலையில் மீட்டனர். இது தொடர்பாக காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மேற்கொண்ட விசாரணையில் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.  

இது தொடர்பான விசாரணையில்., திருமணம் முடிந்து இரண்டும் பெண் குழந்தைகளாக பிறந்துள்ளதால் கணவர் சரவணன் மற்றும் மாமியார்., நாத்தனார் உள்ளிட்டோர் தொடர்ந்து கொடுமைபடுத்தி வந்தனர். 

illegal affair, affair, couple enjoy, husband wife enjoy,

மேலும்., சரவணனிற்கு இக்கல்லூரியில் பணியாற்றி வரும் மற்றொரு பெண்ணுடன் தவறான தொடர்பு ஏற்பட்ட நிலையில்., இவர்கள் இருவரும் தினமும் மணிக்கணக்கில் அலைபேசி மூலமாக பேசியும்., வாட்சப் மூலமாக பேசிக்கொண்டும் வந்துள்ளனர். 

இந்த சமயத்தில்., இவர்களின் கள்ளக்காதல் உறவுக்கு மனைவி மற்றும் குழந்தை இடையூறாக இருந்ததால் மது போதையில் சரவணன் மனைவி மற்றும் குழந்தைகளை கிணற்றில் தள்ளிவிட்டதும் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக காவல் துறையினர் சரவணன் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in perambalur wife and baby try to murder by husband due to illegal affair


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->