கள்ளக்காதலியின் இல்லத்திற்கு சென்று அக்கம்பக்கத்தினரை பதறவைத்த காமுகன்.! அரங்கேறிய கொடூர சம்பவம்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அப்புறம்படை பகுதியை சார்ந்தவர் மஞ்சுளா என்னும் பச்சையம்மாள். இவர் தனது கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வரும் நிலையில்., இதே பகுதியில் ஓட்டுநரான செந்தில்குமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

இந்த பழக்கமானது இவர்கள் இருவருக்குள்ளும் முறையற்ற உறவாக மாறவே., இவர்கள் இருவரும் அடிக்கடி உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். மேலும்., தனிமையில் பல இடங்களுக்கு சென்று வந்துள்ளனர். 

இந்த தருணத்தில்., கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்ததாகவும்., இதனால் இருவரும் சந்திப்பதை தவிர்த்து வந்ததாக தெரிய வருகிறது. 

illegal affair, couple enjoy,

மேலும் செந்தில்குமாரை சந்திப்பதை பச்சையம்மாள் தவிர்த்து வந்ததால்., செந்தில்குமார் ஆத்திரத்தில் இருந்துள்ளார். இந்த நிலையில்., இன்று வீட்டில் தனியாக இருந்த பச்சையம்மாள் செந்தில்குமார் ஆகிய இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. 

இந்த தகராறு ஆத்திரத்தில் முடியவே., செந்தில்குமார் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை வைத்து., பச்சையம்மாளின் கழுத்தை அறுத்துள்ளார். கழுத்து அறுபட்ட நிலையில்., அவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்தனர். 

அவர்கள் வருவதை கண்ட செந்தில்குமார் தப்பித்து ஓடவே., உயிருக்கு ஆபத்தான நிலையில் அங்குள்ள மருத்துவமனையில் அவரை அக்கம் பக்கத்தினர் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தகவல் தெரிவித்ததை அடுத்து., வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in perambalur illegal affair girl try to kill by boy friend


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->