குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்த சென்ற அதிகாரிகளுக்கு காத்திருந்த பெரும் சோகம்..!! பெரம்பலூரில் பேரதிர்ச்சி.!! - Seithipunal
Seithipunal


பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஆலத்தூர் தாலுகா பகுதியில் உள்ள பாடாலூர் குக்கிராம பகுதியை சார்ந்தவர் 17 வயதுடைய சிறுமி. சிறுமியின் தந்தை கடந்த சில வருடங்களுக்கு முன்னதாக உடல் நலக்குறைவால் உயிரிழந்த நிலையில்., சிறுமி தனது தாயாரின் பராமரிப்பில் வசித்து வந்துள்ளார். சிறுமியின் தாயாருக்கு போதிய வருமானம் இல்லாமல் இருந்த நிலையில்., சிறுமி தனது படிப்பையும் நிறுத்தியுள்ளார். 

அன்றாட வாழ்க்கையினை நகர்த்துவதற்க்காக தாயார் விவசாய கூலித் தொழிலாளியாக சென்று வந்த நிலையில்., சிறுமி வீட்டில் தனியாக இருந்து வந்துள்ளார். இந்த சமயத்தில்., திடீரென சிறுமிக்கு திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டு., சிறுமியின் நெருங்கிய உறவினர்களுக்கு மட்டும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலானது சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு தெரியவந்துள்ளது. 

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள்., சிறுமியை மீட்டு காப்பகத்திற்கு அனுப்பி வைத்துவிட்டு., குழந்தை திருமணம் குறித்த சட்ட சிக்கல் மற்றும் உடல்நல பாதிப்புகள் குறித்து கூறிவிட்டு., சிறுமியின் மனநிலையை மாற்றும் பேச்சுகளும் வழங்கப்பட்டது. இந்த தருணத்தில்., சிறுமி திடீரென கண்ணீர் விட்டு கதறியழுதுள்ளார்.

sexual harassment, sexual abuse, sexual torture, rapped,

இதனைத்தொடர்ந்து சிறுமியை சமாதானம் செய்து விசாரணை மேற்கொண்ட அதிகாரிகளுக்கு., சிறுமியின் கிராமத்திற்கு அருகேயுள்ள மங்கூன் கிராம பகுதியை சார்ந்த ரஞ்சித் (வயது 25)., பாபு (வயது 23) ஆகிய இரண்டு காம கொடூரன்களும்., சிறுமியின் தாயார் பணிக்கு சென்ற பின்னர்., சிறுமியின் இல்லத்திற்கு வந்து மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததும்., இதனை தொடர்ந்து செய்து வந்து., கொலை மிரட்டலும் விடுத்தது சென்றுள்ளதாக தெரிவித்துள்ளார். 

மேலும்., இது குறித்து யாரிடமும் கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டியதை அடுத்து., இது குறித்து சிறுமியின் தாயாரிடம் கூறி கதறியழுதுள்ளார். இதனைத்தொடர்ந்தே சிறுமியின் தாயார்., சிறுமிக்கு அவசரமாக திருமண ஏற்பாடு செய்ததும் தெரியவந்துள்ளது. விசாரணைக்கு பின்னர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த காம கொடூரன்களை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அங்குள்ள பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in perambalur girl rapped by culprit police arrest and stooped child marriage


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->