மகளாக நினைக்க வேண்டிய மருமகளிடம் அத்துமீற முயன்ற கணவனை போட்டுத்தள்ளிய மனைவி.!  - Seithipunal
Seithipunal


இந்த உலகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான பல அநீதிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அவ்வாறு நடைபெறும் அநீதிகள் அனைத்தும் அவர்களுக்கு தெரிந்த மற்றும் பழகிய நபர்களாலேயே வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில்., சொந்த மருமகளை பலாத்காரம் செய்ய முயன்ற கணவனை., அவரின் மனைவி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடியை சார்ந்தவர் முனியாண்டி. இவரது மனைவியின் பெயர் பாண்டியம்மாள். இவர்கள் இருவருக்கும் பாண்டி என்ற மகள் உள்ளார். பாண்டிக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்னதாக அதே பகுதியை சார்ந்த மலர் என்ற பெண்ணிற்கு திருமணம் முடித்து வைத்தனர். இந்த நிலையில்., கடந்த சில வருடங்களுக்கு முன்னதாக பாண்டி இரயில் பயணம் செய்யும் போது தவறி விழுந்து கால்களை இழந்தார். 

Tamil online news Today News in Tamil

இந்த சமயத்தில்., கால்களை இழந்த பாண்டிக்கு துணையாக மனைவி மற்றும் பெற்றோர் இருந்து வந்த நிலையில்., இருவருக்கும் திருமணம் முடிந்து பத்து வருடங்கள் ஆகும் நிலையில்., இருவருக்கும் குழந்தைகள் இல்லை. இந்த சமயத்தில்., மருமகளான மலருக்கு மாமனார் முனியாண்டி பாலியல் தொல்லை வழங்கி வந்துள்ளார். 

இந்த செய்தியை தனது மாமியாராக பாண்டியம்மாளிடம் மலர் தெரிவிக்கவே., இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பாண்டியம்மாள் கணவரை கண்டித்த நிலையிலும்., எந்த விதமான பேச்சையும் கேட்காமல் தொடர்ந்து அத்துமீற முயற்சித்துள்ளான். இதனால் ஆத்திரமடைந்த பாண்டியம்மாள் தனது கணவரை கூலிப்படை ஏவி கொலை செய்ய முடிவெடுத்து கொலை செய்துள்ளார். 

கணவரை கொலை செய்த பின்னர் அங்குள்ள பரமக்குடி காவல் நிலையத்திற்கு சென்று விஷயத்தை கூறி கொலை செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த காவல் துறையினர் வீட்டிற்கு விரைந்து இரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த முனியாண்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in paramakudi wife killed her husband due to sexual harassment


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->