ஊட்டியை சுற்றிப்பார்க்க சென்று நூலிழையில் உயிர்தப்பிய தம்பதிகள்.! 100 அடி பள்ளத்தில் உதவிய அதிஷ்டம்.!! - Seithipunal
Seithipunal


 

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வடவள்ளி பகுதியை சார்ந்தவர்கள் வெங்கடேஷ் மற்றும் அவரது மனைவி ஹேமா. இவர்கள் இருவரும் ஊட்டியை சுற்றிப்பார்க்க முடிவு செய்து நேற்று காலை பொழுதில் தங்களது வாகனத்தில் புறப்பட்டனர். 

இவர்களின் இரு சக்கர வாகனமானது குன்னூர் - மேட்டுப்பாளையத்தில் உள்ள மலைப்பாதை அருகே உள்ள மரப்பாலத்திற்கு அருகில் சென்று கொண்டு இருந்த போது எதிர்திசையில் மற்றொரு வாகனமானது வந்துகொண்டு இருந்துள்ளது. 

இதனை கவனித்த வெங்கடேஷ் வாகனத்திற்கு வழிவிட்டு செல்வதற்காக மோட்டார் வாகனத்தை லேசாக திருப்பவே., இதனால் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் 100 அடி பள்ளத்திற்குள் எதிர்பாராத விதமாக பாய்ந்தது. 

இந்த விபத்தில் இருவரும் படுகாயமடைந்து அலறி துடிக்கவே., இவர்களுக்கு பின்னால் வந்த வாகனத்தில் வந்த நபர்கள் இந்த விபத்தை கவனித்ததால்., உடனடியாக சம்பவம் குறித்து காவல் நிலையத்திற்கு தகவலை தெரிவித்துள்ளனர். 

தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு படையினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக்க குன்னூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்., அவர்களுக்கு அங்கு வைத்து முதலுதவிகள் அளித்த பின்னர் சிகிச்சைக்காக கோயம்புத்தூரில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இந்த சம்பவம் காரணமாக சுமார் இரண்டு மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது., ஊட்டியை சுற்றிப்பார்க்க வந்து நூலிழையில் உயிர் ஊசலாடிய தம்பதிகள் நல்ல வேலையாக உயிர் தப்பிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in ooty accident lucky husband and wife saved


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->