மரண வாக்குமூலத்தால் பதறிப்போன காவல்துறை.! வெளியான பகீர் தகவல்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் உள்ள பந்தலூர் அருகேயுள்ள சேரங்கோடு டான்டீ பகுதியை சார்ந்தவர் கணேஷ் ராஜ் (வயது 42). இவரது மனைவியின் பெயர் சிட்டு (வயது 36). இவர்கள் இருவரும் தோட்ட தொழிலாளர்களாக பணியாற்றி வருகின்றனர். 

இந்த நிலையில்., கடந்த மாதத்தின் 28 ஆம் தேதியன்று அங்குள்ள வீதியில் உடல் முழுவதும் தீக்காயத்துடன் சிட்டு உயிருக்கு போராடி அலறித்துடித்தார். இவரை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் மீட்டு., அங்குள்ள பந்தலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். 

பந்தலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்ட பின்னர்., மேல் சிகிச்சைக்காக கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார். இந்த விஷயத்தை அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்ததை அடுத்து தனது வாக்குமூலத்தை பதிவு செய்தார். 

died, suicide attempt, murder,

இந்த வாக்குமூலத்தில் தனது கணவர் மது அருந்தும் பழக்கத்தை வைத்திருந்தார். சம்பவத்தன்று மது அருந்துவதற்கு எனது கணவர் பணம் கேட்ட நிலையில்., நான் அவருக்கு பணம் கொடுக்கவில்லை. இதனால் என் மீது ஆத்திரத்தில் இருந்தார். 

நான் எதிர்பாராத தருணத்தில் என் மீது மண்ணெண்ணெய்யை ஊற்றி பற்றவைத்தார் என்று தெரிவித்துள்ளார். இதனையடுத்து சிட்டு இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்த நிலையில்., இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் கணேஷ்ராஜை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in nilgiris wife killed by husband


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->