கணவனின் தகாத உறவுக்கு பலியான மூன்று பெண் குழந்தைகள் - மனைவி..! நீலகிரியில் பெரும் சோகம்..!!
in nilgiris mother and 3 daughters suicide due to father illegal affair
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் தாலுகா பகுதியில் இருக்கும் ஸ்ரீ மதுரை ஊராட்சி பகுதியை சார்ந்தவர் முருகன். இவரது மனைவியின் பெயர் அனிதா (வயது 34). இவர்கள் இருவருக்கும் திருமணம் முடிந்து அபித்ஷா என்ற 12 வயது பெண் குழந்தையும்., அக்சிதா என்ற 10 வயது பெண் குழந்தையும்., அனுசியா என்ற 8 வயது பெண் குழந்தையும் உள்ளனர்.
கணவன் - மனைவிக்கும் இடையே கடந்த சில நாட்களாக குடும்பத் தகராறு இருந்து வந்த நிலையில்., நேற்று முன்தினம் மீண்டும் இவர்களுக்குள் குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கடும் மன வேதனைக்கு உள்ளான வனிதா தனது மூன்று பெண் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து., தானும் விஷமருந்தி தற்கொலை செய்து முயற்சித்துள்ளார்.
இந்த முயற்சியில்., குழந்தைகளும் வனிதாவும் வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்தனர். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர்., இவர்களை மீட்டு அங்குள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும்., இதுகுறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர்., நால்வருக்கும் சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதி செய்து., பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளத் துவங்கினர். இந்த நிலையில்., இவர்கள் அனைவருக்கும் முதலுதவி செய்யப்பட்ட நிலையில்., தாய் மற்றும் அவரின் குழந்தைகள் மேல் சிகிச்சைக்காக கோயம்புத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையில்., தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில்., பரிதாபமாக சிகிச்சை பலனின்றி உயிர் இறந்தார். 3 குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில்., இது குறித்த விசாரணையில் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் வனிதாவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு., உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதுகுறித்த விசாரணையில்., வனிதாவுடைய கணவரான முருகனுக்கு மற்றொரு பெண்ணுடன் தொடர்பு இருந்துள்ளது. இந்த தகாத உறவை அறிந்த வனிதா கணவரை கண்டித்தும்., இவர்கள் இருவருக்கும் இடையேயான உறவை கைவிட மறுத்து உள்ளனர்.
இதனால் கடும் மன அழுத்தத்துக்கு உள்ளான வனிதா., குழந்தைகளுக்கு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதும்., தற்கொலைக்கு முன்பாகவே இவர் எழுதிய கடிதமும் தற்போது காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் எனது சாவிற்கு எனது கணவர் தான் காரணம் என்றும் வனிதா கூறியுள்ளதால்., கணவர் முருகனிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும்., சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
in nilgiris mother and 3 daughters suicide due to father illegal affair