17 வயது சிறுமியை காம இச்சைக்கு இரையாக்கிய கொடூரன்.. 2 மாத கர்ப்பிணியாக சிறுமி.. கண்ணீரில் பெற்றோர்கள்.!!
in Nilgiris girl sexual abuse police arrest culprit
இந்தியாவின் கேரளா மாநிலத்தில் உள்ள மலப்புரம் பகுதியை சார்ந்தவர் முர்ஷிது (வயது 22). இவர் அவ்வப்போது நீலகிரி மாவட்டத்தில் உள்ள பந்தலூர் பகுதியில் வசித்து வரும் பெரியப்பாவின் இல்லத்திற்கு சென்று வந்துள்ளார்.
இந்த நிலையில், இவரது பெரியப்பாவின் மகள் 12 ஆம் வகுப்பு படித்து கொண்டு இருந்துள்ளார். சம்பவத்தன்று வீட்டில் சிறுமி தனியாக இருந்த நிலையில், மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.
மேலும், மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த கொடூரன், இது தொடர்பாக யாரிடமும் கூறினால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டவே, இதற்கு பயந்து போன சிறுமி இது தொடர்பாக யாரிடமும் கூறாமல் இருந்து வந்துள்ளார்.
இந்த சமயத்தில், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக மாணவிக்கு தீடீர்ன்னு உடல்நலக்குறைவு ஏற்படவே, இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் கேரளாவில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதி செய்துள்ளனர்.
மருத்துவமனையில் சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள், சிறுமி இரண்டு மாத கர்ப்பிணியாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதனை கேட்டு பெற்றோர்கள் கடுமையான அதிர்ச்சிக்கு உள்ளாகவே, இது தொடர்பாக சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்த விசாரணையில், சிறுமி வீட்டில் இருந்த சமயத்தில் அரங்கேறிய கொடூரத்தை கண்ணீருடன் தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சிக்கு உள்ளான பெற்றோர்கள் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இது தொடர்பான புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு முர்ஷிதுவை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
in Nilgiris girl sexual abuse police arrest culprit