பள்ளிக்கு நடந்து சென்ற சிறுமியை கடத்தி விடிய விடிய பாலியல் பலாத்காரம்.. சித்ரவதை.. நீலகிரியில் பேரதிர்ச்சி.!!
in Nilgiris girl kidnapped and sexual abuse by two men police arrest
தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் உள்ள கீழ்கோத்தகிரி அருகேயிருக்கும் தும்பிமலை பகுதியை சார்ந்தவர் முரளி (வயது 26). இவரது நண்பரின் பெயர் கோகுல்ராஜ் (வயது 28). இவர்கள் இருவரும் சேர்ந்து காரொன்றில், அங்குள்ள சோலூர் வழியாக சென்று கொண்டு இருந்துள்ளனர்.
இந்த நேரத்தில், இப்பகுதியை சார்ந்த 15 வயதாகும் சிறுமி தனியாக பள்ளிக்கு நடந்து கொண்டு செல்லவே, இதனை கவனித்த இரண்டு கொடூரன்களும் சிறுமியிடம் பேச்சுக்கொடுத்துள்ளனர். பின்னர் சிறுமி காருக்கு அருகில் வந்ததும் சிறுமியை கடத்தியுள்ளனர்.
சிறுமியை காரில் கடத்தி கோயம்புத்தூருக்கு கொண்டு சென்றுள்ளனர். மேலும், சிறுமியை கோயம்புத்தூர் வரும் வழியில் வைத்தே காரில் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இருவரும் சிறுமியை கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்கு உள்ளக்கியுள்ளனர்.
இதனையடுத்து சிறுமியை கோயம்புத்தூருக்கு அழைத்து வந்து, அங்குள்ள விடுதியில் வைத்து இரவு முழுவதும் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர் சிறுமியை மறுநாள் காலையில் காரில் கொண்டு சென்று கடத்திய இடத்திலேயே இறக்கிவிட்டு தப்பி சென்றுள்ளான்கள்.
வீட்டிற்கு அழுதுகொண்டே சென்ற சிறுமி தனது பெற்றோரிடம் நடந்ததை கூறி கதறியழுததை அடுத்து, இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இது தொடர்பான புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த விசாரணையில், அங்குள்ள கண்காணிப்பு கேமிராக்களை சோதனை செய்ததில் குற்றவாளிகள் குறித்த தகவல் கிடைக்கவே, முரளி மற்றும் கோகுல்ராஜ் என்ற காம கொடூரன்களை காவல் துறையினர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் ஸ்கொயத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
in Nilgiris girl kidnapped and sexual abuse by two men police arrest