சொந்த உறவினரால் சீரழிக்கப்பட்ட அக்கா மற்றும் தங்கை.!! அடுத்து வெளியான அதிர்ச்சி தகவல்.!!
in nammkal 3 girls sexual harassment by a man police investigation going on
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள குமரபாளையத்தை சார்ந்த பெண்மணி இளவரசி (வயது 21). சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அருகேயுள்ள கொளத்தூர் பகுதியை சார்ந்தவர் கார்த்திக் (வயது 24). கார்த்திக்கும் - இளவரசியும் கடந்த மூன்று வருடங்களாக காதலித்து வந்த நிலையில்., கார்த்திக் சொந்தக்காரர் என்ற காரணத்தின் அடிப்படையில் நெருங்கி பழகியுள்ளார்.
இதன் காரணமாக இளவரசி கர்ப்பமடையவே., இந்த தகவலை இளவரசியின் பெற்றோர் அறிந்துள்ளனர். இந்த தகவலை அறிந்த இளவரசியின் பெற்றோர் கார்த்திக்கின் மீது புகார் அளிக்கவே., இருவருக்கும் கடந்த பிப்ரவரி மாதத்தின் போது 11 ம் தேதியன்று காவல் நிலையத்தில்., காவல் துறையினர் முன்னிலையிலேயே நடத்தி வைத்துள்ளனர்.
திருமணத்திற்கு பின்னர் இவர்கள் இருவரும் மேட்டூரில் வசித்து வரும் நிலையில்., திருமணம் முடிந்த சுமார் நான்கு நாட்களுக்கு உள்ளாகவே., வேலை தேடுவதாக கூறி வீட்டை விட்டு புறப்பட்ட கார்த்திக் மீண்டும் இளவரசியை தொடர்பு கொள்ளாமல் இருந்துள்ளார். மேலும்., கார்த்திக்கின் பெற்றோர் இளவரசியை வீட்டிலேயே வைத்து துன்புறுத்த துவங்கியுள்ளனர்.
இந்த நேரத்தில் கார்த்திக் இளவரசியின் பெரியப்பா மகளான மைதிலி என்ற பெண்ணை இளவரசிக்கு தெரியாமல் காதலித்து வந்த நிலையில்., அவரை திருமணம் செய்தததாக இளவரசியின் பெற்றோருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே., அவர்கள் ஏதும் கண்டுகொள்ளாதார் போல இருந்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த இளவரசியின் பெற்றோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் லைத்தனர். இந்த சூழ்நிலையில்., கார்த்திக் திருப்பூரில் பணியாற்றிய சமயத்தில்., நிறுவனத்தில் பணியாற்றிய பெண்ணை காதலித்து ஏமாற்றியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அடுத்தடுத்த அதிர்ச்சி தகவலை கேட்டு அதிர்ச்சியடைந்த நிலையில்., கர்ப்பிணி இளவரசி மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர். இந்த தகவலானது சேலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
in nammkal 3 girls sexual harassment by a man police investigation going on