மனைவியின் கழுத்தை அறுத்து துடிக்கவிட்ட கொடூர கணவன்.! நாமக்கல்லில் பயங்கரம்.!! - Seithipunal
Seithipunal


நாமக்கல் மாவட்டத்தில் உள்ள காவேட்டுபட்டி குப்பம்பாளையம் பகுதியை சார்ந்தவர் ராஜவேல். இவர் அப்பகுதியில் ஸ்டிக்கர் கடை நடத்தி வரும் நிலையில்., இவருக்கு சுஜிதா என்ற பெண்மணியுடன் கடந்த 5 வருடங்களுக்கு முன்னதாக திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. 

ராஜவேலிற்கும் - சுஜிதாவிற்கு திருமணம் முடிந்த சில நாட்களிலேயே குடும்ப பிரச்சனை துவங்கிய நிலையில்., இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு தொடர்ந்து வந்துள்ளது. 

இதனால் இவர்கள் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு வரும் நிலையில்., சம்பவத்தன்று பிரச்சனை வழக்கம்போல முற்றி வாக்குவாதம் அடுத்தகட்டத்துக்கு சென்று அடிதடி நடந்துள்ளது. 

இந்த நேரத்தில்., ஆத்திரம் அதிகமான ராஜவேல் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து சுஜிதாவின் கழுத்தை நெரித்து கொலை செய்ய முயற்சித்துள்ளார். இவரின் அலறல் சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டிற்குள் விரைந்த போது விபரீதம் புரிந்துள்ளது. 

இதனையடுத்து சுஜிதாவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில்., மேல் சிகிச்சைக்காக சேலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் ராஜவேலை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in namakkal wife try to murder police arrest husband


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->