பள்ளி மாணவிகளிடம் அத்துமீறல்.! விசாரணையில் அதிர்ச்சி பதிலை அளித்து., கண்ணீர் வடித்த மாணவிகள்.!!
in namakkal teacher take advantage school girl student
தமிழகத்தின் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரத்தை அடுத்துள்ள நாமகிரிப்பேட்டை அடுத்துள்ள கொங்கலம்மன் கோவில் பகுதியில் இருக்கும் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் கணித ஆசிரியராக சுரேஷ் (வயது 37) என்பவர் பணியாற்றி வருகிறார்.
இந்த பள்ளியில் சுமார் 50 க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர்கள் பணியாற்றி வரும் நிலையில்., இப்பள்ளியில் பயின்று வரும் 8 ஆம் வகுப்பு மாணவிகளிடம் ஆபாச படங்களை காட்டி., பாலியல் வன்முறையிலும் ஈடுபட்டு தொந்தரவு செய்துள்ளார்.
இதனால் பாதிக்கப்பட்ட மாணவிகள் படிப்பிற்க்காக அமைதிகாத்த நிலையில்., குறிப்பிட்ட அளவிற்கு மேல் ஆசிரியரின் அட்டூழியங்கள் தாங்க இயலவில்லை. இதனையடுத்து இது குறித்து பெற்றோர்களிடம் மாணவிகள் கூறியுள்ளனர்.
இதனையடுத்து மாணவிகளின் பெற்றோர்கள் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து., இது தொடர்பான விசாரணையில் "ஆசிரியர் நிர்வாண சிலையின் புகைப்படத்தை காட்டுவார் என்றும்., இதன் உடல் உறுப்புக்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து கூறுவார் என்றும்., அருவருக்கத்தக்க வார்த்தைகள் சிலவற்றை கூறுவார் என்றும் குற்றம் சுமத்தியுள்ளனர். தற்போது சுரேஷை கைது செய்த நிலையில்., இது தொடர்பான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Tamil online news Today News in Tamil
English Summary
in namakkal teacher take advantage school girl student