பேராசிரியரை ஆபாச விடியோவாக பதிவு செய்து மிரட்டிய பேராசிரியர் - மாணவன்.!! நாமக்கல்லில் பயங்கரம்.!!
in namakkal teacher illegal video capturing by professor and student
நாமக்கல் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியின் பேராசிரியர்., தன்னுடன் பணியாற்றி வரும் சக பேராசிரியையை காதலிப்பது போல நாடகமாடி., வாட்சப் வீடியோவில் பேசி ஆபாசமாக படம் பிடித்த சம்பவம் தற்போது வெளிவந்து பெரும் அதிர்வலையை பதிவு செய்துள்ளது.
மேலும்., வாட்சப் அழைப்புகளில் வீடியோ கால் பேசும் பட்சத்தில்., இரண்டு பேர் மட்டும் தான் பேசுகிறோம் என்ற எண்ணத்தில்., தங்களின் நண்பருக்கு இணங்கும் சோகத்தால்., உங்களின் அந்தரங்கம் இணையத்தில் வெளியாகிவிடும் என்றும் காவல் துறையினர் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர்.
இந்த விஷயத்தை தெரிந்துகொள்ளாத பெண்களும்., தெரிந்தும் காதல் வலையில் சிக்கி., காதலனின் பேச்சுக்களில் மயங்கும் பெண்களும்., வாட்சப் வீடியோ அழைப்புகளில் எல்லைகளை மீறி பேசிக்கொண்டு பிரச்சனையில் சிக்கி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பணியாற்றி வரும் பேராசிரியர்., தன்னுடன் பணியாற்றி வரக்கூடிய பேராசிரியையை காதல் வலையில் விழ வைத்து நடித்துள்ளார். இவரின் நடிப்பை நம்பிய பெண்ணும்., ஆசிரியருடன் வாட்சப் வீடியோ அழைப்பில் பேசி கொண்டு இருந்துள்ளனர்.
இந்த தருணத்தில்., காதலன் ஆசை வார்த்தைகளை அள்ளிவிடவே., இதனை ஏற்றுக்கொண்ட ஆசிரியை ஆடைகளை களைந்து பேசவே., இதனை காம கொடூரன் தனது அலைபேசியில் பதிவு செய்து கொண்டுள்ளான்.
மேலும்., இந்த விஷயத்தை தன்னுடன் பழகிய மாணவனிடமும் தெரிவித்த நிலையில்., மாணவன் ஆசிரியையிடம் இது குறித்து தெரிவித்து மிரட்டி வந்துள்ளான். இதனைத்தொடர்ந்து இவன்கள் இருவரும் கூட்டு சேர்ந்து பணம் பறிக்க முயற்சி செய்த நிலையில்., பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இது குறித்த புகாரை ஏற்ற காவல் துறையினர்., வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்து ரகசியமாக விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தையும்., பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ள நிலையில்., இது போன்ற குற்றத்தை குறைக்க பெண்கள் சூதனமாக நடந்து கொள்ள வேண்டியது அவசியமான ஒன்றாகும்.
Tamil online news Today News in Tamil
English Summary
in namakkal teacher illegal video capturing by professor and student