உள்ளாட்சி தேர்தல் நேரத்தில்., பாமக முக்கிய பிரமுகர் கொடூர கொலை..!
in namakkal pmk member murder
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிபாளையத்தை அடுத்துள்ள வெப்படை ரங்கனூர் அம்மான் நகரை சார்ந்தவர் மணிமாறன் என்கிற சுரேஷ் (வயது 35). இவர் பாட்டாளி மக்கள் கட்சியின் பள்ளிபாளையம் ஒன்றிய துணைத் தலைவராக பணியாற்றி வருகிறார்.
இவருக்கு திருமணம் முடிந்து பூங்கொடி என்ற மனைவியும் ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில்., நேற்று நடைபெற்ற ஊராட்சி தேர்தலையொட்டி அங்குள்ள ஏலந்தகொட்டாய் ஊராட்சி தேர்தல் வாக்குச்சாவடி மையத்தில் பூத் ஏஜென்ட்டாக பணியாற்றியுள்ளார்.
பணி அனைத்தும் நிறைவு பெற்று வீட்டில் இருந்த நிலையில்., நேற்று நள்ளிரவு 12 மணி அளவில் சுரேஷுக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. இதனையடுத்து பேசிய சுரேஷ் வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றுள்ளார்.
இவர் எங்கே செல்கிறார்? என்று மனைவி கேட்டதற்கு நண்பனை பார்க்கச் செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் வெகுநேரமாகியும் சுரேஷ் மீண்டும் திரும்பி வீட்டிற்கு வராத நிலையில்., சுரேஷின் அலைபேசியில் தொடர்பு கொண்டபோது அது அணைத்து வைக்கப்பட்டு இருந்துள்ளது.
இதனால் சந்தேகம் அடைந்த பூங்கொடி காவல்துறை நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்ட நிலையில்., இன்று காலை ரங்கனுர் அருகே உள்ள காட்டுப்பகுதியில் சுரேஷின் இருசக்கர வாகனம் நின்று கொண்டிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் அங்குள்ள பகுதியில் சோதனை செய்தபோது., குட்டையில் சுரேஷ் பிணமாக கிடந்துள்ளார். மேலும்., இவரது உடலில் காயங்கள் இருந்துள்ளது.
இதனையடுத்து இவரை அடித்துக் கொலை செய்திருக்கலாம் என்பதை உறுதி செய்து., இவரது சடலத்தை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும்., இவரது கொலைக்கு காரணம் என்ன? என்பது குறித்தும் உள்ளாட்சித் தேர்தல் தகராறில் கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
in namakkal pmk member murder