குச்சிமிட்டாய்க்கு ஆசைப்பட்டு நண்பனின் காதல் கதையை காவியமாக எண்ணிய நட்புக்கள்.. கடத்தல் சொதப்பி செவிட்டோடு சூடு பறந்த விவகாரம்..!!
in Namakkal one side love kidnapping plan
தமிழகத்தின் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தூசூரை அடுத்துள்ள கிராமத்தில் வசித்து வரும் இளம்பெண் நாமக்கல்லில் இருக்கும் பேருந்து நிலையத்தில் உள்ள ஜவுளிக்கடையில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், வாரத்திற்கு ஒருமுறை சேலத்தில் உள்ள அம்மாபேட்டை பகுதியில் உள்ள உறவினரின் இல்லத்திற்கு சென்று வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.
இந்த நிலையில், உறவினரின் பக்கத்து வீட்டில் வசித்து வந்த ஆட்டோ ஓட்டுநரான நாடககாதலன் பூவராகவான், இளம்பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்துள்ளான். மேலும், பெண்ணிடம் இரண்டு முறை தனது காதலையும் தெரிவித்துள்ளான். இவனது காதலை ஏற்க பெண் மறுப்பு தெரிவிக்கவே, நண்பர்களிடம் தனது கெத்தை காண்பிக்க தன் ஒரு(தரு)தலை காதலை பெரிய காதல் என்று கூறி அளந்து விட்டுள்ளான்.
இந்த நிலையில், தனது நண்பர்களிடம் பெண்ணிற்கு வீட்டில் மாப்பிள்ளை பார்ப்பதாகவும், நிச்சயம் ஆகிவிட்டால் இருவரும் உயிரிழந்துவிடுவோம் என்று கூறி நண்பர்களிடம் கதறி அழவே, காதல் என்று கூறினால் புழு கூட படமெடுக்கும் என்று வீறுகொண்டு எழுந்த பூவராகவனின் தோழர்கள் பெண்ணை கடத்த திட்டம் தீட்டியுள்ளனர்.
இதனையடுத்து பெண் எந்த நேரத்திற்கு பணிக்கு வந்து செல்கிறார் என்று நோட்டமிட்டு, திங்கட்கிழமை காலை நேரத்தில் கடத்தல் திட்டம் அரங்கேறியுள்ளது. இதன் அடிப்படையில் ஆட்டோவிலேயே கடத்தல் திட்டத்தை அரங்கேற்ற காத்திருந்த உள்ளங்கள் ஜவுளிக்கடைக்கு வெளியே தயாராக இருந்துள்ளனர். பெண் பணியாற்றி வரும் ஜவுளிக்கடைக்கு உள்ளே பூவராகவனை துணி எடுப்பது போல நோட்டமிட அனுப்பி வைத்துள்ளனர்.
பெண் கடைக்கு வருகை தந்ததும் ஆட்டோவில் அலேக்காக தூக்கி நண்பர்கள் உள்ளே போடவே, கடைக்குள் சென்ற நண்பன் வர நேரம் ஆகியுள்ளது. இந்த நொடிப்பொழுதில் பெண் கூச்சலிடவே, பெண்ணை அக்கம்பக்கத்தினர் காப்பாற்ற திரண்டுள்ளனர். இதனைக்கண்டு பதறிப்போன காதல் நாயகன் பூவராகவன் சிறகடித்து நண்பர்களை சிக்கவைத்து பறந்துள்ளான்.
மூன்று நண்பர்களில் இரண்டு பேர் சிட்டாக பறந்துவிட, ஒருவன் மட்டும் லாரி டயருக்கு நடுவில் சிக்கிய எலியை போல சிக்கியுள்ளான். இதனையடுத்து அவனது கைகளை கயிற்றால் கட்டி பொதுமக்கள் அடித்து நொறுக்கியத்தில் போக்குவரத்து நெரிசலே ஏற்பட்டு விட்டது. பின்னர் பெண்ணின் சித்தப்பாவும் வந்து தனது பங்கிற்கு புலந்து கட்டியுள்ளார்.
இதனையடுத்து மேற்கொண்ட விசாரணையில், மக்களிடம் சிக்கி சின்னாபின்னமாகி பரிதாபமாக துடிதுடித்த நபரின் பெயர் அம்மாபேட்டை ஆட்டோ ஓட்டுநர் குமார் என்பது தெரியவந்துள்ளது. இந்த விஷயம் காவல் துறையினருக்கு தெரியவரவே, மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்த பின்னரே புகார் எடுப்போம் என்று தெரிவித்துள்ளனர். (இதில் குமாருக்கு அடி பலமாக விழுந்துள்ளது). பெண்ணின் சித்தப்பாவும் மருத்துவமனைக்கு அழைத்து சென்று, பெண்ணின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு புகார் அளிக்காமல் சென்றுள்ளார்.
Tamil online news Today News in Tamil
English Summary
in Namakkal one side love kidnapping plan