என் அண்ணியின் வாழ்க்கையை சீரழித்துவிட்டான்..! அதான் அப்படி செய்தேன்..!! பகீர் வாக்குமூலம்..!! - Seithipunal
Seithipunal


நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிபாளையம் அருகேயுள்ள நாட்டகவுண்டன்புதூரில் இருக்கும் காவிரி ஆற்றங்கரையில் சில தினங்களுக்கு முன்னதாக., தலை துண்டிக்கப்பட்ட நிலையில்., ஆணின் பிணமொன்று இருந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி பொதுமக்கள்., காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். 

தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர்., பிணமாக இருந்தவரின் உடலை மீட்டு அங்குள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து., இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொள்ள துவங்கினர். அந்த விசாரணையில்., கொலையான நபர் யார்? எதற்காக கொலை செய்யப்பட்டுள்ளார்? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

அந்த விசாரணையில்., கொலையான நபர் அங்குள்ள குமாரபாளையம் பகுதியை சார்ந்த சின்ராஜ் என்பதும்., இவர் தொழிலாளியாக பணியாற்றி வருவதும் தெரியவந்தது. மேலும்., இவரும் - இவரது நண்பரான கூல் குமாரும் அடிக்கடி ஒன்றாக மது அருந்தி வந்ததும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து சந்தேகத்தின் பேரில் காவல் துறையினர் கூல் குமாரிடம் விசாரணை மேற்கொண்டனர். 

namakkal murder, நாமக்கல் கொலை, அண்ணியுடன் கள்ளக்காதல் வைத்திருந்த நண்பனை கொலை செய்த கொழுந்தன்,

காவல் துறையினர் மேற்கொண்ட தீவிர விசாரணையை அடுத்து., கூல் குமார் - சின்ராஜை கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து கூறப்பட்ட வாக்குமூலத்தின் படி., சின்ராஜிற்கும் - எனது அண்ணிக்கும் முறையற்ற பழக்கமானது இருந்தது. இதன் காரணமாக கடந்த 11 ஆம் தேதியன்று பள்ளிபாளையம் அருகேயுள்ள பகுதிக்கு அழைத்து சென்று மது வாங்கி கொடுத்தேன். 

மது போதையில் இருவரும் பேசிக்கொண்டு இருந்த சமயத்தில்., எனது அண்ணியுடன் கொண்ட கள்ளத்தொடர்பை கைவிட கூறி பொறுமையாக சொன்ன சமயத்தில்., எங்களுக்குள் தகராறு ஏற்பட்டு., ஆத்திரத்தால் சின்ராஜின் வயிற்றில் கத்தியால் குத்தி கொலை செய்தேன். ஆத்திரம் தீராததால்., தலையை தனியாக அறுத்தெடுத்து உடலை ஆற்றினில் வீசினேன் என்று கூறியுள்ளார். இதனையடுத்து காவல் துறையினர் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in namakkal murder culprit says illegal affair with my brother wife


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->