ஐஸ்கீரிம் வாங்கி தராததால் இரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட அம்மா - மகள்..!! நாமக்கல்லில் பெரும் சோகம்.!!
in namakkal mother and daughter attempt suicide
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மோகனூரை அடுத்துள்ள புரளிஒத்தையூர் பகுதியை சார்ந்தவர் கண்ணையன். இவர் கூலித் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவியின் பெயர் கண்ணகி (வயது 34). இவர்கள் இருவருக்கும் அகல்யா (வயது 16) என்ற மகளும் உள்ளார். இவர் அங்குள்ள வளையப்பட்டி அரசு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு பயின்று வருகிறார்.
இந்நிலையில்., நேற்று அங்குள்ள பகுதியில் இருக்கும் கோவிலில் நடந்த திருவிழாவை கண்ணையன் மற்றும் அவரின் மனைவி., மகளுடன் பார்க்க வந்துள்ளனர். இந்த சமயத்தில்., அகல்யாவிற்கு ஐஸ்க்ரீம் சாப்பிட வேண்டும் என்ற ஆவல் வந்துள்ளது. இதனையடுத்து தனது பெற்றோரிடம் ஐஸ்க்ரீம் கேட்டுள்ளார். ஐஸ்க்ரீம் வாங்கி கொடுப்பதற்கு பெற்றோர்கள் மறுத்துள்ளனர்.
இந்த நிலையில்., இந்த பிரச்சனையால் மூவருக்குள்ளும் தகராறு ஏற்படவே., மூவரும் வீட்டிற்கு திரும்பிக்கொண்டு இருந்தனர். இந்த சமயத்தில்., இவர்கள் செல்லும் வழியில் இரயில்வே தண்டவாளம் உள்ளது. இந்த வழியாக இரயில் வந்ததால்., இரயில்வே கேட்டில் காத்துகொண்டு இருந்த சமயத்தில் திடீரென கண்ணகி மற்றும் அகல்யா இரயில் முன் பாய்ந்தனர்.
இதில் அதிவேகத்தில் வந்த இரயில் மோதி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரந்தனர். இந்த விஷயம் குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து., சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் இருவரின் பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
in namakkal mother and daughter attempt suicide