வீட்டு வாசலில் உறங்கிய நபரை தீயிட்டு கொளுத்திய மர்ம நபர்கள்.. நாமக்கல்லில் பேரதிர்ச்சி சம்பவம்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சேந்தமங்கலம் அருகேயுள்ள புதன்சந்தை பகுதியில் இருக்கும் கலங்காணி பகுதியை சார்ந்தவர் கந்தசாமி (வயது 45). இவர் கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவியின் பெயர் அங்கம்மாள். இவர்கள் இருவருக்கும் சாந்தி என்ற மகள் இருக்கிறார். 

அங்கம்மாவுடைய பெற்றோரின் இல்லம் இப்பகுதியில் இருக்கும் நிலையில், நேற்றிரவு அங்கம்மாள் தனது மகளான சாந்தியை அழைத்துக்கொண்டு பெற்றோரின் இல்லத்திற்குஸ் என்றுள்ளார். வீட்டில் கந்தசாமி மட்டும் தனியாக இருந்து வந்த நிலையில், இவரது வீட்டிற்கு முன்புறம் உள்ள கட்டிலில் படுத்து உறங்கியுள்ளார்.

இந்நிலையில், நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த மர்ம நபர்கள் கந்தசாமியின் மீது பெட்ரோலை ஊற்றி தீவைத்துள்ளனர். உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்த நிலையில், வீட்டில் இருந்த இரு சக்கர வாகனமும் தீக்கு இரையாக்கப்பட்டுள்ளது.

கந்தசாமி அலறித்துடித்த நிலையில், இவரது அலறல் சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த மக்கள் விரைந்து செல்கையில், கந்தசாமியின் உடல் தீயினால் சூழப்பட்டு வீட்டு வாயிலில் மயங்கி கிடந்துள்ளார். இவரை மீட்ட அக்கம் பக்கத்தினர் அங்குள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

மேலும், கந்தசாமி எதற்க்காக கொலை செய்யப்பட்டார்? முன்விரோதம் ஏதும் உள்ளதா? என்பது தொடர்பாகவும் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கொலையாளிகளை கைது செய்ய தனிப்படையும் அமைக்கப்பட்டு உள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Namakkal man murder fired up police investigation


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?




Seithipunal
--> -->