கள்ளக்காதலியை ஆற்றங்கரைக்கு வர சொல்ல பலே திட்டம்.. உல்லாசத்தின் போதே கொடூர கொலை செய்த பயங்கரம்.!!  - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருச்செங்கோடு அருகேயுள்ள ஆண்டிவலசை பகுதியை சார்ந்தவர் ஜோதிடர் கந்தசாமி. இவரது மகளுக்கு வெள்ளையம்மாளுக்கு, பக்கத்து ஊரினை சார்ந்த நபருக்கு திருமணம் முடிந்து இரண்டு வருடங்கள் ஆகிறது. 

இவர்களுக்கு திருமணம் முடிந்து மூன்று மாதத்தின் போதே கருத்து வேறுபாட்டின் காரணமாக வெள்ளையம்மாள் கணவரை பிரிந்து வந்த நிலையில், தந்தையின் இல்லத்திலேயே வெள்ளையம்மா வசித்து வந்துள்ளார். 

இந்த நேரத்தில், இதே பகுதியை சார்ந்த முத்து என்ற ஜோதிடருக்கும் - வெள்ளையம்மாளுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கமானது பின்னாளில் காதலாக மாறவே, இருவரும் அவ்வப்போது தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். 

இந்த தருணத்தில், முத்து அவ்வப்போது வெள்ளையம்மாளிடம் இருந்து பணத்தினை பெற்று செலவழித்து வந்த நிலையில், குறிப்பிட்ட சமயத்திற்கு மேல் வெள்ளையம்மாள் திருமணம் செய்ய வற்புறுத்தியுள்ளார். 

தனக்கு திருமணம் செய்ய விருப்பமில்லை என்று கூறி முத்து நிராகரித்து வந்த நிலையில், வெள்ளையம்மாள் திருமணம் செய்யும் முடிவில் உறுதியாக இருந்துள்ளார். இந்தநிலையில், கடந்த 11 ஆம் தேதியன்று வெள்ளையம்மாளை தொடர்பு கொண்ட முத்து, திருச்சியில் உள்ள தொடையூருக்கு வந்தால் திருமணம் செய்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார். 

இதனையடுத்து கள்ளக்காதலனுடன் அதிகாரபூர்வமாக சேரும் எண்ணத்தில், வெள்ளையம்மாள் தொடையூருக்கு சென்ற நேரத்தில் அங்குள்ள ஆற்றங்கரையில் இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளனர். உல்லாசத்திற்கு பின்னர் வெள்ளையம்மாளை கழுத்தறு கொலை செய்து ஆற்றங்கரை ஓரத்தில் புதைத்துள்ளார். 

இதற்கு பின்னர் முத்து தலைமறைவான நிலையில், மகளை காணாது தேடியலைந்த தந்தை காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, இது தொடர்பாக புகாரளித்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்த நேரத்திலேயே, முத்துவும் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in namakkal illegal affair murder police investigation


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->