சிறுமியை காதலில் வீழ்த்தி அபகரிக்க நினைத்த காமுகன்.. சுதாரித்த சிறுமியின் அதிரடி செயல்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள எருமைப்பட்டி பகுதியை சார்ந்த மாணவி, அங்குள்ள மேல்நிலைப்பள்ளியில் பதினோராம் வகுப்பு பயின்று வருகிறார். எருமைப்பட்டி அருகேயுள்ள முட்டான்செட்டி பகுதியை சார்ந்த வாலிபன் சுதாகர். இவன் பொறியியல் பட்டதாரி ஆவான். 

சுதாகருக்கும் - மாணவிக்கும் இடையே ஏற்பட்ட பழக்கமானது பின்னாளில் காதலாக மாறியுள்ளது. இதனையடுத்து இவர்கள் இருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில், சுதாகர் மாணவியிடம் திருமணம் செய்வதாக கூறி பாலியல் தொல்லை செய்து வந்துள்ளான். 

இதனால் கடுமையான அதிர்ச்சிக்கு உள்ளான மாணவி தனது பெற்றோரிடம் காதல் செய்தது குறித்தும், காதலன் துவக்கத்தில் நல்லவன் போல நடித்ததும், தற்போது பாலியல் ரீதியிலான தொல்லை வழங்குவது குறித்தும் கூறியுள்ளார். 

இதனையடுத்து சிறுமியின் பெற்றோர்கள் அங்குள்ள மகளிர் காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளித்தனர். இது குறித்த புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு சுதாகரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Namakkal girl sexual torture police arrest drama lover culprit


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->