தாலி கட்டிய அடுத்த நிமிடமே மணமகனை அடித்த மணமகள்.! விசாரணையில் பெரும் துயர் அடங்கிய பரிதாபம்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சேந்தமங்கலம் பேரூராட்சி பகுதியை சார்ந்தவர் விஜி. இவர் கூலித் தொழிலாளியாக பணியாற்றி வரும் நிலையில்., இவருக்கும் இராசிபுரம் பகுதியை சார்ந்த பெண்ணிற்கும் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டு., கடந்த சில நாட்க்களுக்கு முன்னதாக நிச்சயதார்த்தமும் நடைபெற்று முடிந்து., திருமணத் தேதியும் குறிக்கப்பட்டுள்ளது. 

இதனைத்தொடர்ந்து இவர்கள் இருவருக்கும் அங்குள்ள சோமேஸ்வரர் கோவிலில் வைத்து உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. இவர்களின் திருமணத்திற்கு வந்திருந்த உறவினர்கள் அனைவரும் மணமக்களுக்கு பூ தூவி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.  

மணமகளுக்கு தாலி கட்டிய பின்னர் மணமகன் - மணமகளிற்கு நெற்றியில் திலகமிட்ட சமயத்தில்., இவரது கையை தட்டிவிட்ட மணப்பெண் - மணமகன் கன்னத்தில் ஓங்கி அறைந்து., மணமகன் கட்டிய தாலியை எடுத்து வீசியெறிந்து சென்றார். 

இதனால் இரு வீட்டாரும் கடுமையான அதிர்ச்சிக்கு உள்ளாகவே., கோவிலில் இருந்த அர்ச்சகரும் கோவிலை விட்டு அனைவரையும் வெளியேற்றிவிட்டு புறப்பட்டு சென்றார். இதன் காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டதை அடுத்து., அங்குள்ள காவல் நிலையத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். 

இந்த பேச்சுவார்த்தையில் பெண்ணிற்கு மனநல பாதிப்பு இருந்ததும்., திருமணத்திற்கு விருப்பம் இல்லாததும் தெரியவந்தது. இதனால் இரு வீட்டாரும் சோகத்தில் ஆழ்ந்திருந்த நிலையில்., மணமகனிற்கு உறவுக்கார பெண் ஒருவரை திருமணம் செய்து வைத்துள்ளனர். தற்போது திருமணம் முடிந்த தம்பதிகள் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்று உறவினர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in namakkal girl marriage stooped


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->