நாமக்கல் ஆற்றங்கரையில் பெண்ணின் பிணம்.. விசாரணையில் வெளியாகும் பேரதிர்ச்சி தகவல்... உஷார்.!!
in namakkal girl killed police investigation going on
தமிழகத்தின் நாமக்கல் மாவட்டத்திலுள்ள ராமாபுதூர் பகுதியைச் சார்ந்தவர் ரமேஷ். இவரது மனைவியின் பெயர் திருமங்கை. இவர்கள் இருவருக்கும் திருமணம் முடிந்து ஐந்து மாதங்கள் ஆகும் நிலையில்., திருமங்கை திருப்பூர் மாவட்டத்தில் இருக்கும் வெள்ளகோவில் அருகே உள்ள அமராவதி ஆற்றின் கரையோரம் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்துள்ளார்.
ஆற்றங்ககரையில் பெண்ணின் சடலம் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதிமக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் மேற்கொண்ட சோதனையில்., சுடிதார் அணிந்த நிலையில் பிணமாக பெண் இருந்துள்ளார். மேலும்., அவரின் கையில் எம்.எம் என்று பச்சை குத்தியும் மற்றும் மார்புப்பகுதியில் ஆடம்ஸ் என்றும் பச்சை குத்தி இருந்துள்ளது.
இந்த ஆதாரங்களை சேகரித்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்ட நிலையில்., பெண்ணை ஆற்றங்கரைக்கு கடத்தி வந்து பாலியல் வன்கொடுமை செய்து., துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொலை செய்து இருக்கலாம் என்றும் சந்தேகம் தெரிவித்தனர்.
இதனையடுத்து இது குறித்து திருமங்கையின் கணவரான ரமேஷுக்கு தகவல் தெரிவித்த நிலையில்., அவரும் அவரது குடும்ப உறுப்பினர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில்., திருமங்கை தனது சித்தி மற்றும் சித்தி மகளுடன் அங்குள்ள மோகனூரில் இருக்கும் கோவிலுக்குச் சென்றதும்., பின்னர் சித்தி மற்றும் சித்தி மகள் அவர்களது வீட்டுக்கு செல்வதாக கூறி விட்டு சென்றதும் தெரிய வந்துள்ளது.
திருமங்கையை வழியனுப்பிவிட்டு அவர்களும் வீட்டிற்குச் சென்ற நிலையில்., தற்போது அவர் ஆற்றில் பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். இவர் இங்கு வந்தது எப்படி? இவரை கடத்தி வந்து பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தனரா? என்பது குறித்தும்., அவரது மார்பகத்தில் பச்சை குத்தப்பட்டு இருந்த ஆடம்ஸ் என்று பச்சை குத்தியுள்ள நபர் யார்? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
in namakkal girl killed police investigation going on