சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்று., கொலை செய்த காம கொடூரன்.! நாமக்கல்லில் அரங்கேறிய கொடூரம்.!! - Seithipunal
Seithipunal


நாம் வாழும் உலகில் பல விதமான பிரச்சனைகள் நடந்து வருகிறது. இவ்வாறான பிரச்னைகளில் நம்மை பெரும் துயரத்திற்கு உள்ளாக்குவது பெண்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகள் ஆகும். பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்கு சட்டங்கள் கடுமையாகும் பட்சத்தில்., குற்றங்களை குறைக்க இயலும். 

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலை அருகேயுள்ள வாழவந்திநாடு பகுதியை சார்ந்தவன் ராஜசேகர் (வயது 21). இதே பகுதியில் 15 வயதுடைய சிறுமி., தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இவர் அங்குள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வருகிறார். 

sexual harassment, sexual abuse, rapped,

இந்த சமயத்தில்., காம கொடூரன் ராஜசேகர் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக சிறுமியின் இல்லத்திற்குள் அத்துமீறி சென்று., சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளான். இதனால் பதறிப்போன சிறுமி அலறியதை அடுத்து., கழுத்தை நெரித்து கொலை செய்யவும் முயற்சித்துள்ளான். 

சிறுமி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து மயங்கவே., காம கொடூரன் சம்பவ இடத்தில் இருந்து தப்பியோடியுள்ளான். இவரின் அலறல் சத்தம் கேட்டு விரைந்த அக்கம் பக்கத்தினர் அவரின் பெற்றோர் மற்றும் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்து., மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். 

died, murder, suicide attempt,

சிறுமிக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள்., மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல கூறி., சிறுமியை சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த நிலையில்., சிறுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில்., ராஜசேகரை கைது செய்த காவல் துறையினர்., அவனின் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவமானது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Tamil online news Today News in Tamil

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு 9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்..

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்...


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in namakkal girl died due to sexual harassment try by neighbour


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->