குழந்தையை மலையுச்சியில் இருந்து தூக்கிவீசி கொலை செய்த கொடூர தந்தை.. விசாரணையில் பேரதிர்ச்சி தகவல்.!! - Seithipunal
Seithipunal


நாமக்கல் மாவட்டத்தில் இருக்கும் அரசம்பட்டி என்ற பகுதியைச் சேர்ந்த பாக்கியம- சிரஞ்ஜீவி என்ற தம்பதியினருக்கு 5 வயதில் ஒரு மகனும், 8 வயதில் ஒரு மகனும் இருந்துள்ளனர்.

தம்பதிகள் இருவருக்கும் அடிக்கடி சண்டை நடப்பது வழக்கமாக இருந்துள்ளது. இந்நிலையில், கடந்த நவம்பர் மாதத்தில் இருவருக்கும் ஏற்பட்ட சண்டையில், ஆத்திரமடைந்த சிரஞ்சீவி மனைவியை பழிவாங்க இரண்டு குழந்தைகளையும் வெளியே அழைத்துச் சென்று சீக்குப்பாறை பகுதியில் இருந்து 250 அடி பள்ளத்தில் தூக்கி எறிந்து விட்டு வீடு திரும்பினார். 

குழந்தைகள் காணவில்லை என்று சந்தேகம் அடைந்த மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சிரஞ்சீவியை கைது செய்து விசாரணை நடத்தினர்.

அதில் குழந்தையை தூக்கி வீசி கொன்றதாக அவர் ஒப்புக்கொண்டார். பின்னர் அந்த குழந்தையின் சடலங்களை காவல்துறையினர் மீட்டெடுத்தனர். அதன் பின்னர் சிரஞ்சீவி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருக்கின்றார்.

ஒரு மாத காலமாக சிறை தண்டனை அனுபவித்து வரும் சிரஞ்சீவியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரைத்தன் பேரில் குண்டர் சட்டத்தில் கைது செய்யும்படி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். 

அதன்படி சிறையில் அடைக்கப்பட்டு இருந்த சிரஞ்சீவியை காவல்துறையினர் குண்டர் சட்டத்தில் தற்போது கைது செய்து இருக்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in namakkal father killed baby due to family problem


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->