ஒரேகுடும்பத்தை சார்ந்த ஐவர் துடிதுடித்து பலியான சோகம்.! விபத்தின் பின்னணி சோக தகவல்.!!
in namakkal family members died in accident
தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தில் உள்ள மூஞ்சூர்பட்டு கிராமத்தினை சார்ந்தவர் அசோக் குமார் (வயது 37). இவர் பொறியாளராக பணியாற்றி வரும் நிலையில்., திருச்சி ஸ்ரீரங்கத்தில் இருக்கும் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் பாசன ஆய்வாளராக பணியாற்றி வந்துள்ளார்.
இந்நிலையில்., இவர் தனது மனைவி தேவிபிரியா (வயது 34)., மகன் சாய்கிருபா (வயது 3)., மாமனார் கோவிந்தன் (வயது 72)., மாமியார் இராசாமணி (வயது 68) ஆகியோருடன் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சீரடி சாயிபாபா கோவிலுக்கு செல்ல காரில் புறப்பட்டுள்ளார். இதனையடுத்து இவர்கள் அனைவரும் திருச்சிக்கு வந்து கொண்டு இருந்த நிலையில்., காரினை அசோக் குமார் இயக்கியுள்ளார்.
கார் நேற்று மாலை நேரத்தில் நாமக்கல்லை அடுத்துள்ள ரெட்டிபுதூர் பேருந்து நிறுத்தத்திற்கு அருகே வந்த நேரத்தில்., அச்சாலையோரம் நிறுத்தப்பட்டு இருந்த லாரியின் மீது எதிர்பாராத விதமாக மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த ஐவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இது தொடர்பான தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து உடலை மீட்கும் பணியில் ஈடுபட்டு இருந்த நிலையில்., அனைவரின் உடலும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில்., இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
காவல்துறையிரின் முதற்கட்ட விசாரணையில் ஆந்திராவில் இருந்து மதுரைக்கு லாரியில் பருப்பு ஏற்றி வந்ததும்., லாரியின் ஓட்டுநர் தஷ்தகிரி (வயது 50) லாரியனை சாலையோரம் நிறுத்திவிட்டு சமையல் செய்து கொண்டு இருந்ததும் தெரியவந்தது. மேலும்., விபத்து நடந்த இடத்தினை கணக்கில் வைத்து பார்க்கையில்., அசோக்குமார் உறக்கத்தில் இருந்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
லாரியை பொறுத்த வரையில் சாலையோரம் நிறுத்தப்பட்டு இருந்தாலும்., அங்கு வாகன நிறுத்தத்திற்கான உரிய அனுமதி இல்லாத இடம் என்பதால் லாரி ஓட்டுநர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை அதிகாரி தெரிவித்தார். இதனால் அப்பகுதியில் பெரும் சோகம் சூழ்ந்த நிலையில்., ஒரே குடும்பத்தினை சார்ந்த ஐவர் பரிதாபமாக உயிரிழந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
in namakkal family members died in accident