அதிவேகத்தில் வந்த லாரி - கார்.. நேருக்கு நேர் மோதி அரங்கேறிய கோர விபத்து.. 7 பேர் உடல்நசுங்கி பலி.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் நாமக்கல் மாவட்டத்தில் இருந்து திருச்சி மாவட்டத்திற்கு செங்கலை ஏற்றுக்கொண்ட லாரியொன்று புறப்பட்டு சென்று கொண்டு இருந்துள்ளது. இந்த லாரி அங்குள்ள சின்னவேப்பந்தம் பகுதியில் இரவு 11.15 மணியளவில் சென்று கொண்டு இருந்தது. 

இந்த நேரத்தில், திருச்சியில் இருந்து நாமக்கல் சென்று கொண்டு இருந்த காரும் இதே வழியில் எதிர்திசையில் பயணம் செய்து கொண்டு இருந்துள்ளது. இந்த இரண்டு வாகனமும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது. 

இதில் லாரியின் முன்புறம் மட்டும் பயங்கர சேதம் அடைந்த நிலையில், காரில் பயணம் செய்த ஓட்டுநர் உட்பட ஆறு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். இதில் நாமக்கல் செல்லப்பா காலனியை சார்ந்த ஓட்டுநர் சசிகுமார், சதீஷ்குமார் (வயது 38), மற்றும் பீகாரை சார்ந்த தர்மா (வயது 38), பப்லூ (வயது 39), பேச்சன்குமார் (வயது 35), ஜிதேந்திரன் (வயது 20) ஆகியோர் என்பது தெரியவந்துள்ளது. 

இந்த விபத்து தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர் மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளை மேற்கொண்டனர். மேலும், இடிபாடுகளில் சிக்கியிருந்த நபர்களை சுமார் அரைமணிநேர போராட்டத்திற்கு பின்னர் மீட்டெடுத்துள்ளனர். இவர்களின் உடலை நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு மீட்டு அனுப்பி வைத்தனர்.

இதனால் திருச்சி - நாமக்கல் சாலையில் சுமார் 1 மணிநேர போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்ட நிலையில், வாகனங்கள் மற்றொரு வழியில் திருப்பி விடப்பட்டது. இந்த விபத்தில் பலியான அனைவரும் காட்டுப்புத்தூர் பகுதியில் கட்டிடத்தில் டைல்ஸ் ஓட்டும் பணியில் ஈடுபட்டு வந்தது, பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்புகையில் விபத்தில் உயிரிழந்ததும் தெரியவந்துள்ளது. இது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in namakkal car lorry accident peoples died police investigation


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->