மாணவியை தனிமையில் அழைத்து அத்துமீறிய காமகொடூர ஆசிரியர்.! விசாரணையில் பகீர்..!!
in nagarkovil teacher sexual abuse girl student police arrest culprit
நாகர்கோவில் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியர் ஒருவரை பொதுமக்கள் அடித்து உதைக்கும் காட்சியானது நேற்று வாட்ஸ் அப் மூலமாக பெரும் வைரலாகி வந்தது.
மேலும் பொது மக்களிடம் சிக்கிய ஆசிரியரை அப்போது காவல்துறையினர் இழுத்து செல்லும் காட்சியும் பதிவாகி இருந்தது. இது தொடர்பான விசாரணையில்., அடிவாங்கிய ஆசிரியர் அரசு பள்ளியில் பயின்று வரும் பிளஸ் 2 மாணவியை பள்ளிக்கு அழைத்து சில்மிஷம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதனை கண்ட பொதுமக்கள் அவரை தாக்கியதாகவும் தெரிய வருகிறது. இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து ஆசிரியரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
நாகர்கோவில் மாவட்டத்தில் உள்ள குளத்தூரை சார்ந்த சுரேஷ்குமார் (வயது 30) என்பதும்., இவர் அரசு பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணியாற்றி வருகிறார் என்பதும் தெரியவந்துள்ளது.
மேலும் பொதுமக்கள் தாக்கியதில் படுகாயமடைந்த அவரை அங்குள்ள ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில்., பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் இது குறித்து அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.
இதனையடுத்து இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் சுரேஷ் குமாரை கைது செய்தனர். இது மட்டுமல்லாது சுரேஷ்குமாரின் அலைபேசியை கைப்பற்றி மேற்கொண்ட சோதனையில்., மாணவியை நாடக காதல் வலையில் சுரேஷ் வீழ்த்தியுள்ளது தெரியவந்துள்ளது.
இதுமட்டுமல்லாது பல ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் போன்றவை இருந்துள்ளது. இதனைத்தொடர்ந்து காம கொடூரனிடம் காவல் துறையினர் தற்போது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
in nagarkovil teacher sexual abuse girl student police arrest culprit