ஓரினசேர்க்கை இன்பத்தால் திருமணம் முடிந்த பத்தே நாட்களில் கணவனை பிரிந்து சென்ற மனைவி.!! கண்ணீரில் கரைபுரண்ட கணவன்.!!  - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பகுதியை சார்ந்த இளம்பெண்ணொருவருக்கு கடந்த வாரத்தின் இறுதியில் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. திருமணம் முடிந்து சில நாட்கள் கணவர் வீட்டில் இருந்த நிலையில்., தனது பெற்றோரின் இல்லத்திற்கு கணவருடன் விருந்திற்க்காக சென்றுள்ளார். 

பின்னர் தான் பயின்ற கல்லூரியில் சென்று சான்றிதழ் வாங்கி வருவதாக கூறிய நிலையில்., சென்று வாங்கி வர வீட்டார்கள் அனுமதி வழங்கியுள்ளனர். பின்னர் இரவு நேரம் ஆகியும் வீட்டிற்கு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை தேடியும் காணாததால் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். 

பின்னர் அவரின் கல்லூரிக்கு சென்று விசாரணை செய்த நிலையில்., அவர் கல்லூரிக்கு வரவில்லை என்பது தெரியவந்துள்ளது. இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தனர். 

இவர்களின் புகாரை ஏற்ற காவல் துறையினர் அவரின் தோழிகளிடம் விசாரணை மேற்கொண்ட நிலையில்., அவருடன் பயின்ற சக தோழிக்கும் இவருக்கும் ஓரினசேர்க்கை பழக்கம் இருந்ததாகவும்., இவர்கள் இருவரும் அடிக்கடி உல்லாசம் அனுபவித்து வந்ததும் தெரியவந்தது. 

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அந்த பெண் குறித்து மேற்கொண்ட விசாரணையில்., அவரின் தோழி திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பணகுடியில் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து பணகுடிக்கு சென்ற காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில்., தோழி தற்போது சென்னையில் இருப்பதாக கூறியுள்ளனர். 

இதனையடுத்து அவரது அலைபேசிக்கு தொடர்பு கொண்ட காவல் துறையினர்., தொலைபேசி அணைத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது. இதனையடுத்து இது குறித்து அவரது கணவரிடம் காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில்., இருவருக்கும் திருமணம் முடிந்த நிலையில்., முதலிரவன்று அவரின் கைகளை தொடுவதற்கு கூட விடவில்லை. புதிய இடம் என்பதால் அவ்வாறு இருக்கும் என்று நினைத்தேன் என்று தெரிவித்துள்ளார். இதனையடுத்து தனிப்படை காவல் துறையினர் சென்னைக்கு விரைந்துள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in nagarkovil new married girl escaped from her husband due to want lesbian enjoy


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->