தொழில் போட்டியால் கணவனை கொடூர கொலை செய்த மனைவி..! உடந்தையாக மகன்கள்.. நாகப்பட்டினத்தில் பகீர்.!!
in nagapattinam wife killed husband police investigation going on
தமிழகத்தில் உள்ள நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள தரங்கம்பாடி புதுப்பேட்டை கிராமத்தினை சார்ந்தவர் மதியழகன். இவர் மீனவராக பணியாற்றி வரும் நிலையில்., மேடை அலங்கார பணியை செய்து வருகிறார். இந்த நிலையில்., இவருக்கும் - விஜயலட்சுமிக்கும் திருமணம் முடிந்து., 22 வருடங்கள் ஆகும் நிலையில்., இவர்கள் இருவருக்கும் மோனிஷா என்ற மகளும்., வருண் மற்றும் விமல் என்ற மகளும் உள்ளனர்.
இந்த தருணத்தில்., கணவன் - மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்ப தகராறின் காரணமாக., கடந்த 5 வருடங்களுக்கு முன்னதாக இருவரும் பிரிந்த நிலையில்., விஜயலட்சுமி தனது பிள்ளைகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இந்த தருணத்தில்., இருவரும் தனித்தனியாக மேடை அலங்கார கடையினை நடத்தி வந்துள்ளனர்.
இந்த சமயத்தில்., இருவரும் மேடை அலங்கார கடையினை நடத்தி வந்த நிலையில்., விஜயலட்சுமிக்கு சரியாக வியாபாரம் ஆகாமல் இருந்துள்ளது. இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில்., தனது கணவரின் இரு சக்கர வாகனத்தை தீயிட்டு கொளுத்தியுள்ளார். மேலும்., இதனை அறியாத மதியழகன் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து., இந்த விசாரணையில்., தனது மனைவி வாகனத்தை தீயிட்டு கொளுத்தியது தெரியவந்தது.
இதனை அறிந்து மன உளைச்சலுக்கு உள்ளான மதியழகன்., காவல் நிலையத்தில் அளித்திருந்த புகாரை மீண்டும் திரும்ப பெற்று கொண்டார். இருப்பினும் இவர்களுக்கு வியாபாரம் சரியாக செல்லவில்லை. மேலும்., ஆவணி மாதத்தின் போது மதியழகனிற்கு ரூ.1 இலட்சத்திற்கும் மேலாக ஆர்டர் வந்தது. இந்த தருணத்தில்., விஜயலட்சுமிக்கு மேடை அலங்கார பணிகள் இல்லாமல் இருந்துள்ளது.
இதனால் தனது சொந்த கணவரின் மீதே பொறாமை கொண்ட மனைவி., கணவரை கொலை செய்ய திட்டமிட்டு., கடந்த செப்டம்பர் மாதத்தின் 26 ஆம் தேதியன்று பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பிய மதியழகனை கொலை செய்துள்ளார். கணவனை கொலை செய்து., அங்குள்ள காட்டுப்பகுதியில் உடலை விட்டு சென்ற நிலையில்., மர்ம நபரொருவர் முகம் சிதைக்கப்பட்ட நிலையில்., உயிரிழந்து கிடப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர்., உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த நிலையில்., இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த தருணத்தில்., மதியழகனை தனது மருமகள் கொலை செய்து விட்டதாக கூறி., மதியழகனின் தாயார் வள்ளியம்மை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.
இதனையடுத்து காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில்., தொழில் போட்டி மற்றும் பொறாமையின் காரணமாக கணவரை கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார். இதனையடுத்து இந்த குற்றத்தில் ஈடுபட்ட விஜயலட்சுமி மற்றும் அவரது மகன்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
in nagapattinam wife killed husband police investigation going on