ஓட ஓட விரட்டி வாலிபர் சரமாரியாக வெட்டி கொலை.. மயிலாடுதுறையில் பரபரப்பு.!! - Seithipunal
Seithipunal


நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள மயிலாடுதுறை வரதாச்சாரியார் பகுதியைச் சார்ந்தவர் மூக்கையன். இவரது மகனின் பெயர் மணிகண்டன் (வயது 26). இசைக்குழுவில் பணியாற்றி வருகிறார். 

இவருக்கும், இவரது அக்காவின் கணவர் முனுசாமி என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக இவர்கள் இருவருக்கும் இடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்துள்ளது தொடர்கதையாகி உள்ளது. 

இந்த நிலையில், பொங்கல் பண்டிகையையொட்டி மணிகண்டன் தஞ்சாவூரில் இருக்கும் உறவினர்கள் வீட்டிற்கு வந்துள்ளார். பொங்கல் முடிந்து நேற்று இரவு தஞ்சாவூரில் இருந்து மயிலாடுதுறைக்கு சென்றுள்ளார். 

இந்த நேரத்தில், அங்கு உள்ள ஆரயா தெருவில் நடந்து சென்றபோது 5 பேர் கொண்ட மர்ம கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் அவரை விரட்டி உள்ளனர். இதில் வேகமாக ஓடிய மணிகண்டனை விரட்டி பிடித்து கீழே தள்ளி அரிவாளால் சரமாரியாக வெட்டி சாய்த்த நிலையில், மணிகண்டன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். 

இது தொடர்பாக தகவலறிந்த மயிலாடுதுறை காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து மணிகண்டனின் பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதுகுறித்த வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், முன்விரோதம் காரணமாக மணிகண்டன் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? இவர்களை கொலை செய்தது யார்? என்பது குறித்த விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in nagapattinam Mayiladuthurai youngster murder police investigation


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->