ஆடி மாதத்திற்கு தாயின் இல்லத்திற்கு சென்ற பெண் கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்த துயரம்..!! மனதுடைந்து உயிர் துறந்த கணவன்.!!
in nagapattinam husband attempt suicide due to illegal affair
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள பகுதியை சார்ந்தவர் பாக்கியராஜ் (வயது 35). இவர் விவசாயியாக பணியாற்றி வருகிறார். திருவாரூர் மாவட்டத்தை சார்ந்தவர் கவுசல்யா (வயது 19). பாக்கியராஜிற்கும் - கவுசல்யாவிற்கும் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டு., கடந்த 40 நாட்களுக்கு முன்னதாக இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.
கவுசல்யாவிற்கு திருமணத்திற்கு முன்னதாக வாலிபர் ஒருவருடன் ஏற்பட்ட பழக்கத்தை அடுத்து., இருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்த தகவலானது கவுசல்யாவின் பெற்றோருக்கு தெரியவரவே., இதனையடுத்து மகளின் விருப்பமின்றி அவசர அவசரமாக வரன் பார்த்து பாக்யராஜுவிற்கும் மணம் முடித்து வைத்துள்ளனர்.
இந்த நிலையில்., இருவரும் திருமணத்திற்கு பின்னர் வசித்து வந்த நிலையில்., ஆடி மாதத்தினை முன்னிட்டு கவுசல்யாவை தனது இல்லத்திற்கு பெற்றோர்கள் அழைத்து வந்துள்ளனர். இந்த நேரத்தில்., தாயாரின் இல்லத்திற்கு சென்ற கவுசல்யா தனது காதலனை மீண்டும் சந்தித்து பேசியுள்ளார்.
இதனையடுத்து இருவரும் சேர்ந்து வாழ முடிவு செய்து., இருவரும் பெற்றோருக்கு தெரியாமல் ஓட்டம் பிடித்துள்ளனர். மகளை காணாது தேடி அலைந்த பெற்றோர்கள் விசாரித்ததை அடுத்து., மகள் தனது முன்னாள் காதலனுடன் கரம் பிடித்தது தெரியவந்தது.
இந்த தகவலை அறிந்த பாக்யராஜ் மிகுந்த மன வேதனையுடன் இருந்து வந்த நிலையில்., வயலுக்கு தெளிக்கும் பூச்சி மருந்தை உட்கொண்டு அரை மயக்கத்தில் இருந்துள்ளார். இவரை கண்ட உறவினர்கள் மீட்டு அங்குள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்த நிலையில்., சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனையடுத்து காவல் துறையினர் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவமானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு
9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்..
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்
TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்...
English Summary
in nagapattinam husband attempt suicide due to illegal affair