கர்ப்பிணி மனைவியை வீட்டில் வைத்து., உதவிக்கு வந்த பெண்ணை கொடூர முறையில் சீரழித்த காமகொடூரன்.! அதிர்ச்சியான காவல் துறையினர்.!!
in nagapattinam girl rapped by near house man when his wife pregnancy
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேதாரண்யம் பகுதியை சார்ந்தவர் பன்னீர்செல்வம். இவரது மகனின் பெயர் சதீஷ் (வயது 30)., இவர் கூலித் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணம் நடைபெற்று முடிந்த நிலையில்., இவரது மனைவி கர்ப்பிணியாக தற்போது உள்ளார்.
இந்த நிலையில்., இவரது மனைவி கர்ப்பிணியாக இருப்பதால் அவருக்கு உதவி செய்யும் எண்ணத்தில்., பக்கத்துக்கு வீட்டை சார்ந்த பெண்மணி அடிக்கடி இவர்களின் இல்லத்திற்கு வருகை தந்து தேவையான உதவிகளை செய்யும் வழக்கத்தை வைத்துள்ளார்.
இந்த சமயத்தில்., சம்பவத்தன்று உதவி செய்யும் நோக்கில் அந்த பெண் இல்லத்திற்கு வருகை தரவே., அந்த நேரத்தில் சதீஷின் மனைவி வெளியே சென்றுள்ளார். இதனை தனக்கு சாதகமாக உபயோகம் செய்யும் எண்ணத்தை சதீஷ் திட்டமிட்டுள்ளார்.
அவர்துதிட்டபடி குளிர்பானத்தில் பெண்ணிற்கு மயக்க மருந்தை வழங்கி குடிக்க கூறி கொடுத்துள்ளார்., எந்த விதமான சந்தேகமும் இன்றி குடித்த அந்த பெண் சிறிது நிமிடத்திலேயே மயக்கமடைந்தார்.
பின்னர் அந்த பெண்ணை சதீஷ் பலாத்காரம் செய்ததை அடுத்து., மயக்கத்தில் இருந்த பெண் தான் அடைந்திருந்த கோலத்தை கண்டு அதிர்ச்சியடைந்து கதறியழுதார். இதனையடுத்து இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து., சதீஷின் மீது வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
in nagapattinam girl rapped by near house man when his wife pregnancy