மகனின் காதலியை பாலியல் பலாத்காரம் செய்த தந்தை.. காதலனின் கண்ணீர் நெகிழ்ச்சி.. கொண்டாடும் கிராம மக்கள்..!!
in nagapattinam girl rapped by love boy father marriage gently finished
நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள வேதாரண்யத்தை அடுத்த இருக்கும் செம்பட்டை கிராமத்தைச் சார்ந்தவர் கருப்பு நித்தியானந்தம். இவர் காய்கறி வியாபாரியாக பணியாற்றி வருகிறார்.
இவரது மகனின் பெயர் முகேஷ் கண்ணன் (வயது 20). முகேஷும், வேதாரண்யம் பகுதியைச் சார்ந்த பெண் ஒருவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் சென்னையில் இருக்கும் தனியார் நிறுவனங்களில் ஒன்றாக பணியாற்றி வந்த நிலையில், இருவரும் ஐடிஐ பயின்று வரும் போது காதல் ஏற்பட்டுள்ளது.
இவர்கள் இருவரும் தீவிரமாக காதலித்து வந்தனர். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக பெண் ஊருக்கு வந்துள்ளார். மேலும், மகேசும் ஊருக்கு வந்து தனது காதல் குறித்து தனது தந்தையிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து இந்த விஷயத்திற்கு முகேஷின் தந்தை எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
மேலும், நித்யானந்தம் தனது மகனுக்கு மற்றொரு பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைக்க திட்டமிட்டுள்ளார். இந்த நிலையில், சம்பவத்தன்று தனது மகளின் காதலியை ரகசியமாக சந்தித்துப் பேசிய நினைப்பதாக கூறி முகேஷின் தந்தை, முகேஷின் காதலிக்கு தொடர்பு கொண்டு அவனுக்கும் உனக்கும் திருமணம் செய்து வைக்கிறேன்.
நீ புறப்பட்டு வா என்று கூறியுள்ளார். இதனையடுத்து காதலித்து கரம் பிடித்து விடலாம் என்ற ஆசையில் பெண்ணும் செல்லவே, நித்யானந்தம் அவரை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்து வீட்டில் அடைத்து வைத்து சித்ரவதை செய்து வந்துள்ளான். இதனையடுத்து பாதிக்கப்பட்ட பெண்மணி தப்பித்து அங்குள்ள காவல் நிலையத்தில் புகாரளிக்க, இதுதொடர்பான புகாரை ஏற்ற காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
இது தொடர்பான விசாரணையில் நித்தியானந்தம், அவருக்கு உடந்தையாக இருந்த அவர் மனைவி பவுன் ராஜவள்ளி மற்றும் இதே கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் ஆகியோரை கைது செய்தனர். இதையடுத்து முகேஷ் தனது காதலில் உறுதியுடன் இருந்ததை அடுத்து, தந்தையால் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளான காதலியை கரம் பிடித்து உள்ளார். இவர்கள் இருவரின் திருமணம் அந்த ஊர் மக்களின் முன்னிலையில் நடைபெற்ற நிலையில், புதுமண தம்பதிகளுக்கு ஊர் மக்கள் மற்றும் நண்பர்கள் வாழ்த்து தெரிவித்து சென்றனர். இந்த திருமணம் அப்பகுதி மக்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
in nagapattinam girl rapped by love boy father marriage gently finished