கணவரின் எதிர்ப்பை மீறி நான் உன் இல்லத்திற்கு வருகிறேன்.,உனக்கு திருமணமா?.! கள்ளக்காதலனை கள்ளக்காதலி துடிதுடிக்க செய்த கொடூரம்.!!
in nagapatinam illegal affair friend killed by her finance
நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருக்கும் சீர்காழி பெருமாள் கோவில் சாலை பகுதியை சார்ந்தவர் செந்தில் என்கிற சந்திரசேகர் (43). இவர் கொத்தனாராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவியின் பெயர் பரிமளம்.
இவர் கடந்த 4 வருடங்களுக்கு முன்னதாக உடல் நலக்குறைவால் காலமானார். சீர்காழி அருகேயுள்ள காத்திருப்பு கிராமத்தை சார்ந்தவர் கருணாநிதி. இவருடைய மனைவியின் பெயர் செல்வி (வயது 45). செல்வி கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வருகிறார்.
சந்திரசேகருக்கும் செல்விக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கமானது நாளடைவில் கள்ளக்காதலாக மாறவே., இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர்.
இந்நிலையில்., செல்வி சந்திரசேகரின் இல்லத்திற்கு வருகை தந்து., தனது கள்ளகாதலியிடம் என்னை பெண் பார்ப்பதற்காக மணமகள் வீட்டார் வருகிறார்கள்., இனிமேல் இருவரும் சந்திக்க வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.
இதனை கேட்டு ஆத்திரமடைந்த செல்வி., வீட்டில் இருந்த மண்ணெண்ணையை சந்திரசேகரின் மீது ஊற்றி தீயை பற்றவைத்து விட்டு சம்பவ இடத்தை விட்டு வெளியேறினார். இவரின் அலறல் சத்தம் கேட்டு விரைந்த அக்கம் பக்கத்தினர்., உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த காவல் துறையினர்., உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்து சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவமானது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
in nagapatinam illegal affair friend killed by her finance