கள்ளகாதலனுக்கு நடைபெற்ற திருமணத்தால் நேர்ந்த விபரீதம்.! கள்ளக்காதலி எடுத்த விபரீத முடிவால் நேர்ந்த சோகம்.!!
in nagapatinam girl attempt suicide and died due to illegal affair
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உலா கொள்ளிடம் அருகேயுள்ள கொட்டியம்பாளையத்தை சார்ந்தவர் கோதண்டபாணி. இவரது மகளின் பெயர் சங்கீதா (40). இவர் தனது கணவரை விவாகரத்து செய்து பின்னர்., தனியாக வாழ்ந்து வருகிறார்.
அதே பகுதியில் இருக்கும் கொள்ளிடம் அருகேயுள்ள சாமியம் பகுதியை சார்ந்த சங்கர் (வயது 36) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கமானது இவர்களுக்குள் காதலாக மாறவே., இவர்கள் அடிக்கடி உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில்., கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னதாக சங்கருக்கு திருமணம் நடைபெற்று முடிந்த நிலையிலும்., இவர்களுக்குள் இருந்த பழக்கமானது தொடர்ந்து வந்துள்ளது. இவர்களுக்குள் இருந்த பழக்கத்தால் சில பிரச்சனைகள் ஏற்படவே., இவர்களுக்குள் தகராறு இருந்து வந்துள்ளது.
இதனால் கடும் மன வேதனையடைந்த சங்கீதா மண்ணெண்ணெய்யை ஊற்றி தற்கொலை செய்து கொண்டார். உடலில் தீப்பற்றிய நிலையில்., பலத்த குரலில் அலறிய இவரை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை காண வந்தனர்.
அந்த சமயத்தில் தீப்பற்றி முழுவதும் எறிந்த நிலையில்., பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தார். இவரை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலை அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர்., அவரது உடலை கைப்பற்றிய காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
in nagapatinam girl attempt suicide and died due to illegal affair