கல்லூரி மாணவிகளை விபச்சாரத்திற்கு தள்ளும் இணையதள மோசடி கும்பல்.! வெளியான பேரதிர்ச்சி தகவல்.!!  - Seithipunal
Seithipunal


இந்த உலகில் பல விதமான பெண்களுக்கு எதிரான அநீதி சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறும் சூழலில்., அவர்களை மூளைச்சலவை செய்து விபச்சாரத்திற்கு வலுக்கட்டாயமாக ஈடுபடுத்திய சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை., மும்பை மற்றும் டெல்லி போன்ற மாநகர்களில் இணையம் மூலமாக விபசாரம் நடைபெறுவதாக காவல் துறையினருக்கு இரகசிய தகவலானது கடந்த மாதத்தின் இறுதியில் கிடைத்தது. 

இதனை அறிந்த காவல் துறையினர்., காத்திருந்து மும்பையை தலைமையிடமாக கொண்டு செய்யப்பட்டு வந்த ஆபாச மற்றும் விபசார இணையத்தின் மூலமாக அந்த நபர்களை கையும் களவுமாக கைது செய்துள்ளனர். 

இந்த நிலையில்., இரண்டு போலி நபர்களை தயார் செய்த காவல் துறையினர் அவர்களின் இணையத்தின் மூலமாக தொடர்பு கொண்டு., வாடிக்கையாளர்களாக பதிவு செய்து காத்திருந்து அந்த கும்பலை கைது செய்துள்ளனர். 

இரண்டு நபர்களை அதிரடியாக கைது செய்த காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில்., விபச்சாரத்திற்கு அழைத்து வரப்பட்ட இரண்டு பெண்களும் கல்லூரி மாணவிகள் என்பதும்., அவர்களிடம் பகுதி நேரமாக பணியாற்றுமாறும் ஆசை வார்த்தை கூறி அழைத்து வந்ததும் தெரியவந்தது. 

மேலும்., ஒரு வாடிக்கையாளருக்கு சுமார் ரூ.10 ஆயிரம் வரை கிடைப்பதாவும் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர். இந்த இணையமானது மும்பையை தலைமையகமாக கொண்டு சென்னை., கொல்கத்தா மற்றும் டெல்லி போன்ற மாநகரில் மாணவிகளை விபசாரத்தில் ஈடுபடுத்தியது தெரியவந்தது. 

வெளியூரில் இருந்து பிற ஊர்களில் இருக்கும் விடுதிகளில் தங்கியிருக்கும் மற்றும் விடுதிகளில் தங்கியிருந்து பணியாற்றும் பெண்களிடம் ஆசை வார்த்தைகளை கூறி., மூளைச்சலவை செய்து விபசாரத்தில் ஈடுபடுத்தியது தெரியவந்தது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Mumbai and Chennai prostitution gang arrest and investigation going on


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->