குழந்தையின் வாழ்க்கையில் விளையாடும் விதி...! வெளியான அதிர்ச்சி தகவல்..!!
In manaparai child struggled bore well in 80 feet distance
மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டியைச் எனும் கிராமத்தை சேர்ந்தவர் கட்டடத் தொழிலாளியான பிரிட்டோ ஆரோக்கியதாஸ். இவரது 2 வயது மகன் சுஜித் வின்சென் நேற்று மாலை வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அங்கிருந்த 30 அடி ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்துள்ளான்.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் மற்றும் பொதுமக்கள், சுஜித்தை மீட்கும் முயற்சியாக ஆழ்துளைக் கிணற்றுக்கு அருகில் பொக்லைன் இயந்திரம் கொண்டு பள்ளம் தோண்டும் பணியில் ஈடுபட்டனர். 20 அடி ஆழம் தோண்டப்பட்ட நிலையில் பாறை இருந்ததால் அந்த முயற்சி கைவிடப்பட்டது.
மதுரையைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் உருவாக்கிய பிரத்யேக இயந்திரத்தின் மூலமாக குழந்தையை மீட்கும் முயற்சி நடைபெற்றது. இரவு 10.30 மணிக்கு இயந்திரத்தின் வழியாக விடப்பட்ட கயிற்றைக் கொண்டு கைகளில் சுருக்கு போட முயற்சி மேற்கொள்ளப்பட்டு மீட்புப் பணிகள் நடைபெற்றது.
அடுத்தடுத்து தீயணைப்பு துறையினர் மற்றும் உள்ளூர் ஆழ்துளைக்கிணறு அமைப்பாளர் போன்றோரின் ஆலோசனைகளின் படி பல முயற்சிகள் நடந்து வந்த நிலையில் அனைத்தும் தோல்வியில் முடிந்தது. இதனையடுத்து மாநில பேரிடர் மீட்பு படையினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் தற்போது காலத்தில் குழந்தையை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்களுக்கு உதவியாக அண்ணா பல்கலைக்கழத்தில் சார்பாக சிறப்பு குழுவினரும் விரைந்து கொண்டு இருக்கின்றனர். இந்த நிலையில்., 70 அடி ஆழத்தில் இருந்த குழந்தை 80 அடி ஆழத்தில் சென்று விட்டதாகவும்., குழந்தையை சுற்றி ஊற்று நீர் சிறிதளவு கசிய துவங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
In manaparai child struggled bore well in 80 feet distance