குடும்பத்தின் வளர்ச்சிக்காக கடலுக்குள்ளே நிலையில்லாத பயணத்தில் கணவன்.. கர்ப்பிணி மனைவிக்கு துடிதுடிக்க நேர்ந்த சோகம்.!!
in mamallapuram pregnant lady accident died with child
தமிழகத்தின் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் இருக்கும் புதிய கல்பாக்கம் மீனவர் பகுதியை சார்ந்தவர் சத்தியமூர்த்தி. இவர் மீன்பிடித்தொழில் செய்து வருகிறார். இவரது மனைவியின் பெயர் திலகவதி (வயது 35). இவர் தற்போது நிறைமாத கற்பனையாக இருந்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று அங்குள்ள கோவளம் பகுதியில் யூ.கே.ஜி பயின்று வரும் தனது மூத்த மகன் திருமுருகனை (வயது 4) பள்ளியில் விடுவதற்காக, கிழக்கு கடற்கரை சாலை பேருந்து நிறுத்தத்தில் பேருந்திற்காக காத்துகொண்டு இருந்துள்ளார்.
புதிய கல்பாக்கம் சாலையில் இருக்கும் தடுப்புச்சுவர் வளைவுப்பகுதியை தாயும் - மகனும் கடக்க முயற்சி செய்துள்ளனர். இந்த தருணத்தில், மாமல்லபுரத்தினை நோக்கி பயணம் செய்து கொண்டு இருந்த கார் இருவரின் மீதும் பயங்கரமாக மோதியுள்ளது.
இந்த விபத்தில், தூக்கி வீசப்பட்ட இருவரும் இரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். இதனை கண்ட பொதுமக்கள் இது தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் இருவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
இந்த நேரத்தில், திலகவதியின் கணவர் கடலில் மீன்பிடித்து கொண்டு இருந்ததை அடுத்து, வாக்கிடாக்கி மூலமாக தகவலை தெரிவித்துள்ளனர். தகவலை அறிந்ததும் பதறிப்போன சத்தியமூர்த்தி மருத்துவமனைக்கு வந்து, இருவரின் உடலை கண்டு கதறியழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
Tamil online news Today News in Tamil
English Summary
in mamallapuram pregnant lady accident died with child