நாடக காதலை ஏற்க மறுத்த சிறுமியின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த கொடூரன்.! மதுரையில் பேரதிர்ச்சி.!!  - Seithipunal
Seithipunal


என்றுதான் பெண் பிள்ளைகளுக்கு நாடக காதல் பிரச்சனையில் இருந்து விமோட்சனம் என்று தெரியவில்லை.... தினமும் ஒரு கொலைகள் - குற்றங்கள்....... மதுரை மாவட்டத்திலுள்ள உசிலம்பட்டி அருகேயுள்ள ஓணாம்பட்டி கிராமத்தை சார்ந்தவர் பால்பாண்டி. இவரது மனைவியின் பெயர் கவிதா. இவர்கள் இருவருக்கும் 16 வயதுடைய சந்தியா என்ற மகள் உள்ளார். 

இவர் அங்குள்ள பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு பயின்று வந்த நிலையில்., இவர்கள் குடும்பத்தோடு மதுரையில் வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில்., இவர்களின் சொந்த ஊரான ஓணாம்பட்டியில் நடைபெற்ற கோவில் திருவிழாவிற்கு வருகை தந்த பால்பாண்டி மற்றும் அவரது குடும்பத்தினர் அவர்களின் பெற்றோரின் இல்லத்திற்குச் சென்று தங்கியிருந்துள்ளனர். 

drama love, fake love, நாடக காதல் ,

திருவிழா முடிந்ததும் சந்தியா தனது பாட்டியுடன் தங்கியிருக்க ஆசைப்பட்ட அவருடன் தங்கியிருந்துள்ளார். மேலும்., பால்பாண்டி - கவிதா இருவரும் மதுரைக்கு வந்துள்ளனர். பாட்டி வீட்டில் இருந்த சந்தியா தோட்டத்திற்கு மாலை நேரத்தில் குளிக்கச் சென்று நீண்ட நேரம் வீடு திரும்பாமல் இருந்துள்ளார். 

இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் சந்தியாவை தேடியதில்., தோட்டத்தின் அருகே இருக்கும் பகுதியில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தந்தை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது பாட்டி மற்றும் உறவினர்கள் கதறியழுதனர். மேலும்., இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இந்த தகவலை அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து., உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

பின்னர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட சமயத்தில்., இதே பகுதியை சேர்ந்த அம்மாவாசி என்பவனின் மகன் மாதவன் (வயது 24) முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தது காவல்துறையினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். 

died, murder, killed, suicide attempt,

இந்த சமயத்தில்., காவல்துறையினர் மேற்கொண்ட தீவிர விசாரணையில் கொலை செய்ததை ஒப்புக் கொண்டுட கொடூரன்., திருவிழாவிற்கு வந்திருந்த சந்தியாவிடம் தன்னை திருமணம் செய்துகொள்ள ஒருதலைக்காதல் மூலமாக பேசிய கொடூரன்., அவரின் காதலை சந்தியா ஏற்க மறுத்ததால்., ஆத்திரமடைந்து கொலை செய்தது தெரியவந்தது. 

சந்தியா தனியாக தோட்டத்திற்கு குளிக்க வருவதை அறிந்த கொடூரன்., சாந்தியவிடம் மீண்டும் நாடக காதலை வெளிப்படுத்திய நிலையில்., இவனின் காதலை மீண்டும் ஏற்க மறுப்பு தெரிவித்ததால்., அவரை அங்குள்ள குன்று பகுதிக்கு கடத்தி சென்று தலையில் கல்லை போட்டு கொலை செய்துள்ளான் என்பது தெரியவந்துள்ளது. இது குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Madurai usilampatti girl killed due to drama love


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?




Seithipunal
--> -->