திருமணம் முடிந்த நான்கே நாட்கள்.. வாழ்க்கையை துவங்கவிடாமல் படுத்திய வேலைப்பளுவால், இளம்பெண்ணின் விபரீத முடிவு.!!
in Madurai new married girl due to work torture
தமிழகத்தின் மதுரை மாவட்டத்தில் உள்ள அரசடி பகுதியை சார்ந்தவர் மணிகண்டன் (வயது 37). இவருக்கு தேனி பகுதியை சார்ந்த தவச்செல்வி (வயது 31) என்ற பெண்மணியை கடந்த 12 ஆம் தேதி திருமணம் செய்து வைத்துள்ளனர்.
தவச்செல்வி தேனியில் இருக்கும் தமிழ்நாடு தொழில் கூட்டுறவு வங்கியில் காசாளராக பணியாற்றி வரும் நிலையில், திருமணத்திற்கு பின்னர் தம்பதிகள் இருவரும் ஆதிபட்டியில் வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், திருமணம் முடிந்த நான்காவது நாளில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தவச்செல்வி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த சமயத்தில் வெளியே சென்று வந்த மணிகண்டன் வீட்டிற்கு நுழைந்த நிலையில், மனைவி தற்கொலைக்கு முயற்சித்திருப்பதை கண்டுள்ளார்.
இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவர் மனைவியை மீட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட அவசர ஊர்தியில் அனுப்பி வைக்கப்பட்டார்.
அரசு மருத்துவமனையில் இவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், இவர் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து மணிகண்டன் காவல் நிலையத்தில் தனது மனைவியின் இறப்பிற்கு வேலைப்பளு காரணம் என்று கூறி புகார் அளித்துள்ளார். இந்த புகார் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
in Madurai new married girl due to work torture