நேருக்கு நேர் மோதிய இருசக்கர வாகனம்.. காவல் அதிகாரி உட்பட 3 பேர் துடிதுடித்து பலி.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் மதுரை மாவட்டத்தில் உள்ள திருமங்கலம் அருகேயுள்ள எம்.சுப்புலாபுரம் பகுதியை சார்ந்தவர் கார்த்திக் பாண்டியன் (வயது 32). இவர் காவல்துறை அதிகாரியாக பணிசெய்து வருகிறார். 

இவரது நண்பரின் பெயர் ஜெயபாண்டி. இவர்கள் இருவரும் ஒரே இருசக்கர வாகனத்தில்., விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அழகாபுரியை நோக்கி பயணம் செய்து கொண்டு இருந்தனர். 

இந்த நேரத்தில்., திருமங்கலம் அருகேயுள்ள பாறைப்பட்டி வளைவிற்கு அருகே வந்த தருணத்தில்., சாலையின் எதிர்ப்புறம் வந்த இரு சக்கர வாகனம் மீது எதிர்பாராத விதமாக மோதியுள்ளது. 

எதிர்புறம் வந்த வாகனத்தில் தேனி மாவட்டம் போடியை சார்ந்த கல்லூரி மாணவர்களான கேசவன் (வயது 19)., எத்தன ராஜ் (வயது 21) ஆகியோர் வந்து கொண்டு இருந்துள்ளனர். இவர்கள் இருவரின் வாகனம் எதிர்பாராத விதமாக மோதியுள்ளது. 

இந்த விபத்தில் நால்வரும் வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட நிலையில்., கார்த்திக் பாண்டியன் மற்றும் கேசவன்., எத்தன ராஜ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியாகினர். ஜெயபாண்டியன் மட்டும் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்துள்ளார். 

இவ்விபத்தை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் மீட்டு அங்குள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில்., இது தொடர்பாக தகவலறிந்த காவல் துறையினர் பலியானவர்களின் உடலை மீட்டு அங்குள்ள மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in madurai motor cycle accident 3 youngster died


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->