குழந்தை எனக்கு பிறக்கவில்லை... கொலை செய்துவிடு..! இளம்பெண்ணின் விபரீத ஆசையால், கேள்விக்குறியாக வாழ்க்கை... மதுரையில் பேரதிர்ச்சி.!!
in madurai mother killed baby due to enjoy with uncle before marriage
தமிழகத்தின் மதுரை மாவட்டத்தில் உள்ள புதுப்பட்டி பகுதியை சார்ந்தவர் சூசை மாணிக்கம். இவரது மகளின் பெயர் சுஸ்மிதா. இவர் 12 ஆம் வகுப்பு பயின்று வந்து கொண்டு இருந்த நேரத்தில் கர்ப்பமாகியுள்ளார். இது தொடர்பாக அறிந்த பெற்றோர்கள், சுஸ்மிதாவிடம் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில், காரியாபட்டி பகுதியை சார்ந்த அமல்ராஜ் என்பவரை காதலித்து வந்ததும், அமல்ராஜ் திருமண ஆசை வார்த்தை கூறி நெருங்கியதில் கர்ப்பமானதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, அமல்ராஜ் திருமணம் செய்ய சம்மதம் தெரிவித்து, திருமணம் செய்துகொண்டுள்ளார்.
இந்நிலையில், சுஸ்மிதா அவரது அத்தை மகனான ராஜேஷ் என்பவருடன் தாம்பத்தியம் வைத்துக்கொண்டது அமல்ராஜிற்கு தெரியவந்துள்ளது. இந்த விஷயத்தை அறிந்த அமல்ராஜ் சுஸ்மிதாவிடம் விஷயத்தை கேட்கவே, அவரும் உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார்.
இந்த நேரத்தில், கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக சுஸ்மிதாவிக்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில், இந்த குழந்தை தனக்கு பிறக்கவில்லை என்று அமல்ராஜ் தனது மனைவி சுஸ்மிதாவிடம் சண்டையிட்டு வந்துள்ளார். இதன்பின்னர் காவல் நிலையத்திற்கு சென்ற பிரச்சனையை சமாதானமாக பேசி முடித்துள்ளனர்.
இருப்பினும் கடுமையான மன உளைச்சலில் இருந்து வந்த அமல்ராஜ், ஒரு கட்டத்திற்கு மேல் குழந்தையை கொலை செய்ய வற்புறுத்தியுள்ளார். குழந்தையை கொலை செய்தால் மட்டுமே உன்னுடன் வாழ்வேன் என்றும் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து தனது வாழ்க்கைக்கு ஆபத்து வரும் என்று எண்ணிய சுஸ்மிதா, தான் பெற்றெடுத்த பிஞ்சு குழந்தைக்கு 11 மாதம் ஆன நிலையில், பச்சிளம் குழந்தை விகாஷை தண்ணீர் பாத்திரத்தில் மூழ்கடித்து கொலை செய்து, குழந்தை தவறி விழுந்து இருந்துள்ளதாக நாடகமாடியுள்ளார்.
காவல் துறையினரின் விசாரணையின் போது ஏற்பட்ட சந்தேகத்தின் அடிப்படையில், காவல்துறையினர் சார்பாக தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த விசாரணையின் போது மேற்கூறிய அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த கொலைக்கு உடந்தையாக இருந்த சுஸ்மிதாவின் தந்தை சூசை மாணிக்கம் மற்றும் அவரது கணவர் அமல்ராஜ், மாறியலுக்காஸ் மற்றும் விமலாவை காவல் துறையினர் கைது செய்தனர். தலைமறைவாக இருக்கும் ராஜேஷை தீவிரமாக தேடி வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
in madurai mother killed baby due to enjoy with uncle before marriage