கரோனா சோதனைக்கு அழைத்து சென்ற புகைப்படம் இணையத்தில் வைரல்.. மனவேதனையில் வாலிபரின் விபரீத முடிவு.!! - Seithipunal
Seithipunal


மதுரை மாவட்டத்தில் உள்ள முல்லைநகர் பகுதியை சார்ந்தவர் முஸ்தபா (வயது 35). இவர் கேரளாவில் தொழிலாளியாக பணியாற்றி வந்த நிலையில், இந்தியா முழுவதிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதற்கு பின்னர் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். 

இவர் கேரளாவில் இருந்து திரும்பியதை பக்கத்து வீட்டுக்காரர்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு காவல் துறையினர் மற்றும் சுகாதாரத்துறையினர் விரைந்துள்ளனர். இதன்பின்னர் விசாரணை மேற்கொண்டு முஸ்தபா மற்றும் அவரது தாயை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல திட்டமிட்டுள்ளனர். 

இதற்க்காக அவசர ஊர்திக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில், அவசர ஊர்தி வர தாமதமானதால் சரக்கு வாகனத்தில் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். மருத்துவமனையில் இவருக்கு கரோனா பாதிப்பு இல்லை என்பது தெரியவந்துள்ளது. 

இதனையடுத்து இருவரும் இல்லத்திற்கு திரும்பிய நிலையில், இவர்களின் புகைப்படம் இணையத்தில் உலா வந்துள்ளது. இதனால் கடுமையான மனவேதனை அடைந்த முஸ்தபா, நெல்லையில் சென்னையில் இருந்து நெல்லைக்கு சென்ற சரக்கு இரயில் முன்னர் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in madurai man suicide due to corona panic photo shared in social media


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->